கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்த ஏலத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் வீரர் இவர்தான் -சின்ன தல கணிப்பு!

ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 23ஆம் தேதி கொச்சியில் வைத்து நடைபெற இருக்கிறது . இதில் உலகம் முழுவதிலும் இருந்து 405 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள், எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணி எடுக்கும் என்று எதிர்பார்ப்பு இப்போதே துவங்கிவிட்டது

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதற்கு முன்பில்லாத வகையில் இந்த வருடம் நிறைய வீரர்களை விடுவித்துள்ளது . இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரரை தேர்ந்தெடுக்க போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இப்பொழுதே தொற்றிக் கொண்டது .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சிஎஸ்கே அணியின் குட்டி தல சுரேஷ் ரெய்னா வெள்ளியன்று நடைபெறும் மினி ஏலத்திற்கு சிறப்பு வல்லுனராக ஜியோ சினிமாவால் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த மினி ஏலம் பற்றி கூறிய அவர் இந்த மினி ஏலமானது விஜய் ஹசாரே போட்டி மற்றும் அபுதாபில் நடைபெற்ற டி10 ஆகியவற்றிற்கு பிறகு நடப்பதால் எந்தெந்த வீரர்கள் ஃபார்மில் உள்ளார்கள் என்பதை அறிந்து வைத்து ஏலத்தில் எடுக்க நன்றாக இருக்கும் என்று கூறினார் .

அப்போது சிஎஸ்கே அணி எந்த வீரரை எடுப்பார்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியில் தற்போது ஆல் ரவுண்டர் தேவை உள்ளது அதனால் அவர்கள் சாம் கரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு முயற்சி செய்யலாம் என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா அயர்லாந்து அணியின் இடது கை பந்து வீச்சாளர் ஜோஸ்வா லிட்டில் இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று தெரிவித்தார் . நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டிகளிலும் அயர்லாந்து அணிக்காக சிறப்பான பந்து வீசிய இவர் ஏழு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது . இதில் நியூசிலாந்துக்கு எதிராக இவர் எடுத்த ஒரு ஹாட் ட்ரிக் அடக்கம் .

இவர் பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா ஜோசவா லிட்டில் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார் நடந்து முடிந்த டி20 உலக கோப்பைகளில் சிறப்பாக பந்து வீசினார். அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டிகளில் அவருடன் இணைந்து விளையாடினேன் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் மேலும் ஒரு இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்ப்பார் என்று கூறி முடித்தார்.

Published by