டி20 உலகக்கோப்பையை மிஸ் பண்ண கூடாதுனா, நாங்க இதை பண்ணியே ஆகணும் – ரோகித் பேட்டி!

0
453

இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்னர் இதை சரி செய்து கொள்ள வேண்டும் என்று மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு பேட்டியில் தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார்கள். இம்முறையும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் பாவுமா. 

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆன ரிலே ரோசோ அபாரமாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்கள் அளித்திருந்த இதில் நான்கு சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசியில் வந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து ஐந்து பந்துகளுக்கு 19 ரன்கள் அடித்திருந்தார் மில்லர். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. 

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். அதுவும் நீடிக்கவில்லை. 

14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ரிஷப் பன்ட் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்த போது, துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 120 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. பின்னர் தீபக் சகர் 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்ம் அதுவும் நீடிக்கவில்லை. 178 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவில் போட்டி வென்றது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், “இதற்கு முன்னர் நான் பலமுறை கூறியிருக்கிறேன். எங்களுக்கு அன்றைய நாள் போட்டி வெற்றியா? தோல்வியா? என்பது பற்றிய கவலை இரண்டாம் பட்சமே. முன்னதாக ஒட்டு மொத்த அணியாக எவ்வாறு செயல்படுகிறோம்? ஒவ்வொரு போட்டியிலும் எங்களை மெருகேற்றிக் கொள்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்பது மட்டுமே எங்களது குறிக்கோள். உலக கோப்பைக்கு முன்பாக விளையாடிய இரண்டு அணிகளும் மிகச் சிறந்த அணிகள். அவர்களுடன் போராடி தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கை கிடைத்திருக்கிறது. 

இந்த இரண்டு தொடர்களுக்கு பிறகு பார்க்கையில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பின்னடைவாக இருக்கிறது. அதை சரி செய்வதற்கு விரைவில் புதுவித முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பும்ரா இல்லாதது கூடுதல் பின்னடைவு. பும்ராவிற்கு மாற்று வீரரை ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்ட பிறகு, அதைப் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.” எனவும் ரோகித் சர்மா தெரிவித்தார்.