ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட்டை கழட்டிவிட்ட தோனி.. சிஎஸ்கேவுக்கு வாங்காத காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

0
561
Pant

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு ரிஷப் பண்ட்டை வாங்குவதாக இருந்ததாகவும், ஆனால் அவர் வைத்த ஒரு டிமாண்ட் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அந்த முடிவை ஏலத்தில் கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டுக்கு 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச விலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய பேட்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருவது அந்த அணி நிர்வாகத்திற்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு ரிஷப் பண்ட்

சமீபத்தில் ரிஷப் பண்ட் மகேந்திர சிங் தோனி உடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். அவருடைய வீட்டிலும் சில நாட்கள் தங்கி இருந்த செய்திகள் வெளியாகின. மேலும் தோனி ரிஷப் பண்ட் உடன் வெளியில் சில இடங்களில் காணப்பட்டார். இத்துடன் சுரேஷ் ரெய்னா ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்படலாம் என்று மெகா ஏலத்திற்கு முன்பாக சூசகமாக தெரிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் மெகா எலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தக்க வைத்து குறைந்த தொகையுடன் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலமாக ரிஷப் பண்ட் டை சிஎஸ்கே அணி வாங்க விரும்பவில்லை என்பது அப்பொழுதே தெரிந்து விட்டது. ஆனால் இதற்கு இடையில் என்ன நடந்தது என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு குழப்பமாக இருந்து வந்தது. தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே ரிஷப் பண்ட்டை கழட்டி விட காரணம்

இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாக ரிஷப் பண்ட்டை வாங்குவதற்காக இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள சிஎஸ்கே முடிவு செய்திருக்கிறது. இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் தனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் டிமாண்ட் வைத்திருக்கிறார். இதை சிறிது காலம் பொறுத்து பார்க்கலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது. இதை ரிஷப் பண்ட் ஏற்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : நாங்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை.. உண்மையில் இதுதான் அங்கு நடந்தது – ராஜஸ்தான் ராயல்ஸ் விளக்கம்

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தாங்கள் கழட்டிவிட நினைத்த மூன்று வீரர்களையும் சேர்த்து ஐந்து வீரர்களை தக்க வைப்பதாக அறிவித்தது. அத்துடன் ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணிக்கு வாங்கும் முடிவையும் கைவிட்டது. ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை விரும்பிய காரணத்தினால் தோனியின் இடத்தில் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாது போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -