மேட்ச் முடிந்த அடுத்த நொடி.. பேட்டிங் பயிற்சியில் அஸ்வின்.. அப்போ அது கன்ஃபார்மா.? ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
1862

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

ரோஹித் சர்மா விராட் கோலி ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் ருத்ராஜ், கில், கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் எடுத்தனர். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன் பிறகு கிட்டத்தட்ட 21 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் பத்துபவர்களில் 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

இந்த மாத துவக்கத்தில் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் ஆசியக் கோப்பை போட்டியின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் அந்தப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

ஒருவேளை அவர் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இடம்பெற தவறினால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு கருத்து நிலவி வந்தது. ஆசிய கோப்பையின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் இன்று முதல் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

மேலும் இந்தப் போட்டி முடிந்த உடனே அடுத்த சில நிமிடங்களில் அஸ்வின் பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது. அஸ்வின் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபடுவதை பார்க்கும் போது உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறலாம் என்ற ஒரு நம்பிக்கையும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. அக்சர் பட்டேல் காயம் தீவிரமாக இருந்து மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலும் அவரிடம் பெறவில்லை என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியாகிவிடும்.