ரோகித்துக்கு ஆதரவு.. நட்சத்திர மும்பை இந்தியன்ஸ் வீரர் மனைவி பதிவு.. முடிவுக்கு எதிர்ப்பு!

0
825
Rohit

அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடருக்கு மினி ஏலம் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோற்று சில வாரங்கள்தான் ஆகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எல்லாவற்றையும் மறக்க வைத்து, அனைவரையும் ஐபிஎல் களத்திற்குள் இழுத்து வந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை அதிரடியாக டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் தனது அணிக்கு கூட்டி வந்தது. ஹர்திக் பாண்டியா இடத்தில் வேறு யாராவது இருந்தால் இப்படி செய்வார்களா? என்று ஆச்சரியமாக இருந்தது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோஹித் சர்மாவை, அவர் விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து முறை கேப்டனாக இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கோப்பையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். எனவே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஒரு அர்த்தம் இருந்தது.

- Advertisement -

ஆனால் இது எல்லாவற்றையும் உடைத்து அதிரடியாக அடுத்த ஆண்டுக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது.

இது ரசிகர்களின் மத்தியில் மட்டும் அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சூரியகுமார் யாதவ் சூசகமாக உடைந்த இதயம் கொண்ட புகைப்படத்தை பதிவேற்றி தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

இன்னும் ஒருபடி மேலே போய் சூரியகுமார் யாதவியின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் மக்களை நடத்தும் விதம் எப்போதும் மனதில் இருக்கும்!” என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்த பதிவை உடனுக்குடன் நீக்கவும் செய்திருக்கிறார்.

இதை ஒரு சிலர் ரோகித் சர்மாவுக்கான ஆதரவு என்று பார்க்கிறார்கள். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டனாக சூரியகுமார் யாதவ் இருந்து வந்தார். எனவே அடுத்த கேப்டனாக அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. எனவே இது தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அவரது மனைவி பார்க்கிறார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!