“இந்திய அணி சொந்த காசுல சூனியம் வச்சுக்குது.. ஏம்பா இந்த மாதிரி பண்ணிங்க?” – ஸ்டூவர்ட் பிராட் விமர்சனம்

0
330
Broad

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரையில் மூன்று போட்டிகள் முழுவதுமாக நடைபெற்று முடிவுகள் கிடைத்திருக்கிறது.

முழுமையாக நடந்து முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது. தற்பொழுது நான்காவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது.

- Advertisement -

நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிக்கு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகச் சாதகமாக கொடுக்கப்பட்டது.

பேட்டிங் செய்வதற்கு சாதகமாக கொடுக்கப்பட்ட இரண்டு போட்டிகளின் ஆடுகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடி ரன் குவித்தார்கள். அதேவேளையில் இந்திய பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட் எடுக்கும் திறமையில் இருந்தார்கள்.

இதே தொடரின் முதல் போட்டியில் சுழல் பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. அந்த ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை விட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். காரணம் ஆடுகளம் ஒத்துழைத்ததால் பந்துவீச்சாளர்கள் பெரிதாகஉழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

இப்படி பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அனுபவம் இல்லாத இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் போட்டிக்குள் வந்து விடுகிறார்கள். பந்து வீச்சுக்கு சாதகம் இல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கூட்டிக்குள் வர முடிவதில்லை.

இந்த நிலையில்தான் நான்காவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சுகு சாதகமான மிகவும் மெதுவான மற்றும் எதிர்பாராத நேரங்களில் பந்து தாழ்வாக வரும்படியும் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது “நான் முக்கியமாக இங்கிலாந்து பற்றி ட்விட் செய்யவே விரும்புகிறேன். ஆனால் இந்த இடத்தில் இந்திய அணியையும் பார்க்கிறேன். இந்தியா பேட்டிங் செய்த சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் மிகவும் அற்புதமான அணியாக இருக்கிறது. அங்கு அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களின் திறமை வெளியில் வருகிறது.

இதன் காரணமாக அவர்களை எதிர்த்து விளையாடும் அணிகளை அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அதே சமயத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், எதிரணியின் சுழல் பந்துவீச்சாளர்களும் போட்டிக்குள் வருகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது நான்காவது போட்டிக்கு ஏன் இப்படி சுழல் பகுதிக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தார்கள் என எனக்கு புரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.