நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை அணி மூன்றாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்தியாவுக்கு இலங்கை அணி உதவி செய்யுமா?
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நியூசிலாந்து அணி இருக்கிறது. நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அடுத்து இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.
இந்த காரணத்தினால் இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்த்தும் பொழுது, அது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிறிய வசதியை ஏற்படுத்தும். மேலும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் முழுதாக வீழ்த்திவிட்டால் அவர்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருந்து வெளியேற்றி விட முடியும்.
550 நாட்களுக்கு பிறகு வாய்ப்பு
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் 550 நாட்களுக்கு பிறகு இலங்கை பேட்ஸ்மேன் ஒசாடா பெர்னாடோ மீண்டும் வாய்ப்பு பெற்று இருக்கிறார். உள்நாட்டுத் தொடர் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்கள் ரமேஷ் மெண்டிஸ், வான்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க :
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மிலன் ரத்னாயகே.