இலங்கை நல்லா ஆடறாங்க.. ஆனா இவங்க 2 பேருக்குதான் உ. கோ ஜெயிக்க அதிக வாய்ப்பு – குமார் சங்கக்கரா கணிப்பு!

0
8307
Sangakkara

அடுத்த மாதம் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் நடக்க இருக்கின்ற காரணத்தினால், உலகக் கோப்பை தொடரில் போட்டி மிகவும் அதிகமாக இருக்கின்றது.

ஏனென்றால், வெளிநாடுகளில் நடக்கும் பொழுது இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் கொஞ்சம் பின் தங்குவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க இருக்கின்ற காரணத்தினால், மைதானங்கள் பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த அணிகளிடம் நல்ல சுழற் பந்துவீச்சு உள்ளது. மேலும் சுழற் பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் வலிமையான போட்டியைக் கொடுக்கும் அணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பைத் தொடர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் பேட்டிங் வரிசையை மிக நீளமாக மாற்றி இருக்கின்றன. மேலும் அதிரடி அணுகுமுறையை கொண்டு இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கின்ற உலகக் கோப்பையை வெல்ல எந்த அணிகளுக்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்று, இலங்கை அணியின் லஜெண்ட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் சங்கக்கரா தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் கோப்பையை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ள அணிகள். இலங்கை அணி கடைசி போட்டியிலும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆசியக் கோப்பை தொடர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இலங்கை பிளே ஆப் சுற்றுக்கு போட்டி அளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். பிளே ஆப் சுற்றில் வென்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லலாம். ஆனால் நாக் அவுட் போட்டியில் அந்த நாள் உங்களுடையதாகவும், நீங்கள் சிறப்பாகவும் இருப்பது அவசியம்.

இங்கு தென்னாப்பிரிக்கா கூட நல்ல அணிதான். இந்தத் தொடரில் ஏழு எட்டு அணிகள் நல்ல போட்டியளிக்கக்கூடிய அணிகளாக இருக்கின்றன. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளையும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் அணிகளாக கணிக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!