டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
போட்டி நடைபெறும் நியூயார்க் ஆடுகளம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் என்று கிளாசன் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முக்கியமாக சின்ன அணிகள் கூட இந்த தொடரின் மூலம் பெரிய எழுச்சி பெற்று வருகின்றன. இந்த நியூயார்க் மைதானத்தில் குறைந்தது ஒவ்வொரு போட்டிக்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடி வருகிறார்கள். பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் இருக்கிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல படுத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நினைத்ததும் தற்போது நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் டி20 உலக கோப்பைத் தொடரை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளது. என்னதான் இருந்தாலும் இந்த ஆடுகளத்தில் விளையாடப்பட்ட போட்டிகளில் ஒரு போட்டியில் கூட 140 ரன்கள் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தென்னாப்பிரிக்கா வீரர் என்று கிளாசன் கிரிக்கெட்டை தீவிரமாக விரும்பும் ரசிகர்கள் வேண்டுமானால் இத்தகைய போட்டியை விரும்பலாம். ஆனால் சாதாரண ரசிகர்களுக்கு இது ஒத்து வராது என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது போன்ற குறைந்த ரன்கள் கொண்ட ஆட்டங்கள் பிடிக்கலாம். இந்த மாதிரியான ஆடுகளங்கள் பெரிய அணி, சிறிய அணி என்ற இடைவெளியை குறைப்பதாக உணர்கிறேன்.
இது போன்ற ஆடுகளங்களில் எந்த அணியாலும் எளிதாக வெற்றிகளை பெற முடியும். இந்த ஆடுகளத்தில் சிறிய அணிகள் கூட பெரிய அணிகளை வெற்றி பெறும் நிலை உள்ளது. ஆனால் வியாபார ரீதியாக பார்த்தோம் என்றால் இது மாதிரியான ஆட்டங்கள் ரசிகர்கள் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரியவில்லை. டி20 லீக் தொடர் காரணமாக அமெரிக்காவில் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க:இந்திய அணி இரண்டாவது சுற்று வெஸ்ட் இண்டீஸில்.. எந்த வீரரை கழட்டிவிடும்.. என்ன மாற்றம் நடக்கும்?
இதனால் கிரிக்கெட் தொடர்களில் சுவாரசியத்தை கூட்ட வேண்டியது அவசியம். பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது ஹை-ஸ்கோரிங் ஆட்டங்களின் தேவையும் அதிகரிக்கிறது” என்று கிளாசன் கூறியிருக்கிறார். கிளாசன் கூறியது போலவே தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற முன்னணி நாடுகள் கூட இந்த ஆடுகளத்தில் 120 ரன்கள் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.