“ரசிகர்கள் மன்னிச்சிடுங்க.. இந்த விஷயம் மாறினதால நாங்க தோத்துட்டோம்!” – இலங்கை கேப்டன் சனகா வேதனையான பேச்சு!

0
53705
Shanaka

இன்று 16வது ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 6.1 ஓவரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசியக் கோப்பை கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்த போட்டி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் தனித்துவமான ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது.

இலங்கை அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் பலம் வாய்ந்த பாகிஸ்தான அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. மேலும் நடப்பு ஆசிய சாம்பியனாகவும் இருந்தது. எனவே இலங்கை அணியினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பாக இருந்தனர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு தோல்வி அவர்களை மிகுந்த காயப்படுத்தி இருக்கிறது.

இலங்கை அணியின் பெரும்பாலான ரசிகர்கள் எப்படியும் தங்கள் அணி தோற்றாலும் கூட இந்திய அணிக்கு எதிராக மிக நல்ல போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். சமூக வலைதளங்களில் அவர்களது மீம்ஸ்கள் மிக வைரலாக சென்று கொண்டிருந்தது. ஆனால் இது இந்திய அணியின் ரசிகர்களை எதிர்பார்க்காத ஒரு போட்டியாக அமைந்த விதத்தில், இலங்கை கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அங்கங்களும் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன!

- Advertisement -

இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா பேசும் பொழுது
“சிராஜ் பந்துவீச்சுக்கே எல்லாப் பெருமையும் சேரும். பேட்டர்களுக்கு இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் மேகமூட்டமான சூழ்நிலை பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. இது மிக நிச்சயமாகக் கடினமான நாள். நாங்கள் இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தொடரில் எங்கள் அணியில் ஆட்டத்தின் நடுப்பகுதியில் குசல் மெண்டிஸ் மற்றும் சதிரா இருவரும் பேட்டிங் செய்தது, சரித் அசலங்கா அழுத்தத்தை கையாண்ட விதம், மற்றும் இளம் வீரர்கள் ஆகியோர்கள் செயல்பட்டது எங்களுக்கு நேர்மறையான விஷயமாக அமைந்திருக்கிறது.

வரும் உலக கோப்பையில் இவர்கள் எல்லாம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாமல் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இடத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு நல்ல முன்னேற்றம்.

கடைசியாக நான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். மேலும் இந்திய அணியின் கிரிக்கெட் பிராண்டுக்கு அவர்களை வாழ்த்துகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!