ரிஷப் பண்ட் வேகமாக காயத்திலிருந்து குணமடையும் வீடியோ இணையதளத்தில் அவரே வெளியிட்டது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதன் வீடியோவை கீழே பார்க்கலாம்.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 2021-2023 ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றில் இந்திய அணிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மைதானங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நன்றாக செயல்பட்டதற்கு இவரது பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் காரில் சென்ற போது சாலை விபத்திற்கு உள்ளாகினார். இதனால் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். அறுவை சிகிச்சை பிறகு மருத்துவர்கள் அளித்த அறிகையில்,
“கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ரிஷப் பண்ட் நடப்பதற்கு சிரமப்படுவார். அதன் பிறகு மெல்ல மெல்ல நடக்கலாம். முழுமையாக குணமடைந்து கிரிக்கெட்டிற்கு திரும்புவதற்கு கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேல் எடுக்கும்.” என்றும் கூறினார். இதனால் இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னணி விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் இல்லாதது பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது. அது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இரண்டிலும் நன்றாகவே பிரதிபலித்தது. இவரது வரவை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்
அவ்வபோது காயத்திலிருந்து குணமடைந்து வரும் வீடியோவை மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார் ரிஷப் பண்ட். இவர் இன்று, கடந்த மாதம் நடக்க முடியாமல் நடந்து கஷ்டப்பட்டு மாடிப்படி ஏறுவதையும் தற்போது நன்றாக வேகமாக மாடிப்படி ஏறுவதையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை பார்க்கும் பொழுது எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்து வருகிறார் என்பது தெளிவாக தெரிந்தது. ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
Not bad yaar Rishabh ❤️❤️😂. Simple things can be difficult sometimes 😇 pic.twitter.com/XcF9rZXurG
— Rishabh Pant (@RishabhPant17) June 14, 2023