ஷிகர் தவான் ஓய்வுக்கு காரணம் இதுதான்.. இனி இன்னும் நிலைமை மோசமா இருக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து

0
45
Gavaskar

சில நாட்களுக்கு முன்பு இந்திய வீரர் ஷிகர் தவான் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவருடைய ஓய்வுக்கு மிக முக்கியமாக அமைந்த காரணிகள் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

தற்போது 38 வயதாகும் ஷிகர் தவான் இனி இந்திய அணியில் தனக்கான வாய்ப்பு என்பது ஒரு சதவீதம் கூட கிடையாது என்பதையும், தன்னுடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதையும் உணர்ந்து, மிகச் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்திருக்கிறார். அதே சமயத்தில் எல்லா வீரர்களின் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பும் வீரராக ஷிகர் தவான் இருந்ததால் அவருடைய ஓய்வு பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

2019 உலகக்கோப்பை காயம்

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சதத்துடன் ஷிகர் தவான் மிகச் சிறப்பாக ஆரம்பித்தார். ஐசிசி தொடர்கள் என்றால் மிக அற்புதமாக விளையாடும் அவருக்கு அந்த உலகக் கோப்பை தொடரும் மிகச் சிறப்பாகவே ஆரம்பித்தது. ஆனால் காலில் ஏற்பட்ட காயம் அவரை உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக வைத்தது.

அவர் அந்த உலகக் கோப்பையில் விளையாடி பெரிய ரன்கள் எடுத்திருந்தால், அதற்கு அடுத்து கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்று விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஏனென்றால் அந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஐந்து சதங்கள் அடித்தார். அதுதான் ரோகித் சர்மாவை இவ்வளவு தூரம் கூட்டி வந்தது.

- Advertisement -

ஷிகர் தவான் ஓய்வுக்கான காரணங்கள்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஓய்வுக்கான முடிவை எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் உடல் மனதிடம் போதும் போதும் என்று சொல்லும் போது முடிவெடுப்பதற்கு அதுவே மிக சரியான நேரம்.ஆனாலும் தற்பொழுது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவது இன்னும், அவர் விளையாட்டில் இருந்ததை விட மோசமாகத்தான் மாறும். எப்போதும் சிரித்த முகத்துடன் பாசிட்டிவாக இருக்கும் ஷிகர் தவான் கப்பார் என எல்லோராலும் அழைக்கப்படுவார்.அவர் ஒரு மகத்தான வீரர்.

இதையும் படிங்க : ஆஸி ODI டி20 தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 3 வீரர்கள் நிரந்தர நீக்கம்.. 5 இளம் வீரர்கள் சேர்ப்பு

அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது பகுதியில் காயங்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. இந்த காயங்கள் அவருடைய திறமையை எப்பொழுதாவதுதான் முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தன. இந்திய அணியின் ஒரு வீரராக இருந்து அனுபவிக்க வேண்டிய நேரத்தில் அவர் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இதனால்தான் வந்தது. மேலும் வீரர்கள் ஒரு தொடர் அல்லது ஒரு பெரிய டோர்னமென்ட்டில் சரியாக விளையாடாத பொழுது தேர்வாளர்களும் வேறு வீரர்களிடம் போய்விடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -