டி20 கிரிக்கெட்டில் மறக்க முடியாத நிகழ்வு – இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் ஷாகின் அப்ரிடி வாழ்த்து

0
9634
Shaheen

இந்தியா அணி 17 வருடங்கள் கழித்து டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றி இருக்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மிகவும் பரபரப்பான போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நடந்து முடிந்த இறுதிப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் அந்த வரலாற்று வெற்றிக்கு மிகவும் முக்கியமானவராக அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இருந்தார்ர்.

இந்த நிலையில் அவர் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் பொழுது “மறக்க முடியாத அற்புதமான டி20 கேரியர் விராட் கோலி. ஓய்வு பெறும் உங்களுக்கும் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க :

பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் எப்பொழுதும் விராட் கோலி இடம் மிகுந்த மரியாதை உடனும் நட்புடனும் இருப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த வகையில் தற்பொழுது நடு இரவில் விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் ஷாகின் ஷா அப்ரிடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்!