பாபர் அசாம் தான் நம்பர் 1.. மேஜிக் பந்துவீச்சால் தான் அவுட்டாக்க முடியும்.. நியூசி வீரர் கருத்து

0
1115

தற்போது உள்ள சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பாபர் ஆசாம்க்கு பேட்டிங்கில் எவ்வித குறையும் இல்லை என்று தெரிவித்தார். ஒரு காலத்தில் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் களத்துக்கு வந்தால் அவரை சிங்கிள் எடுக்க வைத்துவிட்டு எதிர் திசையில் உள்ள பேட்ஸ்மனை கொண்டு ஆட்டத்தை கடத்தும் யுத்தி முப்பது ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் பாபர் ஆசாமுக்கு அப்படி ஒரு யுத்தியை கடைப்பிடிக்க முடியாது என்று குறிப்பிட்ட ஸ்காட்ச் ஸ்டைரிஸ், அவர் சிங்கிள்ஸ் எடுத்தும் வேகமாக ரன்கள் அடித்தும் பந்து வீசும் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்துவார் என்று பாராட்டினார். பாபர் அசாமை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்று குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ், நீங்கள் துணிச்சலாக முடிவெடுத்து பந்து வீசினால் மட்டுமே அவரை ஆட்டம் இழக்க வைக்க முடியும் என்று கூறினார்.

ஒவ்வொரு முறையும் அவருக்கு நீங்கள் பந்து வீசும் போது ரிஸ்க் எடுத்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் ஏதாவது ஒரு மேஜிக் பந்தால் மட்டுமே பாபர் அசாம் ஆட்டம் இழப்பார். மற்றபடி அவரை அவுட் ஆக்குவது அவ்வளவு சுலபமல்ல என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்தார்.ரிஸ்க் எடுக்கும் போது நாம் வீசும் பந்தில் சிறு தவறு நிகழ்ந்தாலும் அது மைதானத்திற்கு வெளியே சென்று விடும். அந்த அளவுக்கு பாபர் அசாம் திறமையான வீரராக விளங்குவதாக குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ், பாபர் அசாமின் பேட்டிங் காட்சிகளை பல மணி நேரம் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அவருக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார்.

ஒட்டுமொத்த வீரர்களும் தற்போது பாபர் அசாமை புகழ்ந்து வருகின்றனர். இது அவருக்கு மறைமுகமாக நெருக்கடியை ஏற்படுத்தலாம்.இதனால் இந்தியாவுக்கு எதிராக அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மதியம் எழுந்துள்ளது. பாபர் ஆசாம் தனது திறமையை நிரூபிப்பாரா? இல்லை விராட் கோலி தமது பழைய பார்மை மீட்பாரா என்று வரும் 28ஆம் தேதி தெரிந்துவிடும்.

- Advertisement -