“ODI 244 ரன் அடிச்சது இந்திய டீம்ல எடுக்கனும்னு இல்லங்க” – குட்டி சேவாக் பிரித்வி ஷா உருக்கமான பேட்டி!

0
2061
Prithvi

கிரிக்கெட் என்பதை விதியின் விளையாட்டு என்று சொல்பவர்களும் உண்டு. போட்டியில் என்ன நடக்கும்? என்பது மட்டும் தெரியாத விஷயம் கிடையாது. ஒரு வீரருக்கு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன நடக்கும்? எப்படி அமையும்? என்பதும் தெரியாது!

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியைப் பிடிக்காதவர்களிடம் கூட, அவர் அடுத்த மூன்று வருடங்களுக்கு சதம் அடிக்க மாட்டார் என்று கூறி இருந்தால், அவர்கள் அதை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் கிரிக்கெட்டில் அது நடந்தது.

- Advertisement -

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆப் டிரைவ் விளையாடாமல் ஒரு இரட்டை சதம் அடிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார் என்று யாராவது சொல்லி இருந்தால், அதை சச்சினே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அதுவும் நடந்தது.

ரஞ்சி டிராபி, துலிப் டிராபி, சர்வதேச டெஸ்ட் போட்டி என தன்னுடைய மூன்று அறிமுகங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய வீரரான பிரித்வி ஷா கிரிக்கெட் வாழ்க்கை இந்த நிலைக்கு வரும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

பல சர்ச்சைகள் சூழ்ந்த அவரது சிறிய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கிறது. அவருடைய துவக்க இடத்திற்கு இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் எக்கச்சக்கமான இளம் வீரர்களே இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர் மீண்டும் திரும்பி அணிக்குள் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

- Advertisement -

இந்த நிலையில்தான் அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி சோமர்செட் அணிக்கு எதிராக நேற்று 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதனை அடுத்து மீண்டும் இந்திய அணிக்குள் ப்ரித்வி ஷா என்று அவரைப் பிடித்தவர்களின் குரல்கள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பிரித்வி ஷா “நிச்சயம் இங்கு ஒரு அனுபவம் கிடைக்கும். நான் உண்மையில் இந்திய தேர்வாளர்கள் என்னை இந்திய அணியில் தேர்வு செய்வார்களா என்றெல்லாம் நினைக்கவில்லை. நான் இங்கு என்னுடைய நேரத்தை மிக நல்ல முறையில் கழிக்க விரும்புகிறேன். எனக்கு இங்கு வீரர்களுடனும் அணி ஊழியர்களுடனும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. நான் இவற்றை அனுபவித்து வருகிறேன்.

சூரியன் வெளியே வந்து இந்திய சூழ்நிலை போலவே இருந்தது. ஒரு இன்சைட் எட்ஜில் நான் அவுட் ஆகாத போதே உங்களுக்கு தெரியும் அதாவது இன்றைய நாள் என்னுடைய நாள் என்று. விளையாட்டில் நீங்கள் சில நேரங்களில் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். எனவே இது எனக்கான நாள் என்று நினைக்கிறேன். அது அமைந்த உடன் நான் திரும்பிப் பார்க்கவில்லை.

நான் எப்பொழுதும் எனது அணிக்காக விளையாடக்கூடியவன். நான் எனது அணியை முதலில் வைத்து அதற்காக ஓடும் வகையான வீரர். இதுபோன்ற ஸ்கோர்கள் எனது அணியை வெற்றி பெற வைத்தால் நான் தொடர்ந்து இப்படி செயல்பட்டு ஆக வேண்டும்!” என்று மிகவும் உருக்கமாக கூறியிருக்கிறார்!