கேப்டனா தோனி எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்கிற ஆளு.. ஆனா கோலி வேற மாதிரி – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
55
Virat

ரவி சாஸ்திரி பயிற்சி காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கர் கேப்டனாக தோனி மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டில் எப்படியான அணுகுமுறையை கொண்டு இருந்தார்கள் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

தோனியின் கேப்டன்சி காலத்தில் விராட் கோலி மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு வீரராக இருந்து அணியின் நட்சத்திர வீரராக மாறினார். அதே சமயத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி விராட் கோலியின் தலைமையின் கீழ் மிகவும் வசதியாக இணக்கமாக விளையாடினார். இவர்களுக்குள் இருந்த புரிதல் மிகவும் அபாரமாக இருந்தது.

- Advertisement -

தோனி – விராட் கோலி

இந்திய கிரிக்கெட்டில் ஒருவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நகரும் பொழுது எந்தவித அதிர்வும் இல்லாமல் மிக இயல்பாக கேப்டன் பரிமாற்றம் நடந்தது தோனி விலகிய பொழுதுதான் நடந்தது. அவர் கேப்டனாக இருந்த பொழுதே அடுத்த கேப்டனாக விராட் கோலியை அடையாளம் காட்டினார். தொடர்ந்து அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நகரும் பொழுது மிக அழகாக கேப்டன் பொறுப்பு விராட் கோலி இடம் சென்றது. தோனியும் வீரராக விராட் கோலி தலைமையில் வசதியாக இருந்தார்.

இருவரும் இப்படிப்பட்டவர்கள்தான்

இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “ஒரு கேப்டனாக தோனி இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை யோசித்து, உள்ளே நுழைவதற்கு முன்னால் ஒரு விஷயத்தின் எல்லா கோணங்களையும் ஆராய்ந்து சென்றார். நான் ஒரு விஷயத்தை செய்தால் அது பற்றி எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார்.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் களத்தில் எதிரணி தவறு செய்யும் வரை காத்திருப்பது என முடிவு செய்தார். அது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய பயன்களை கொடுத்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் கலையில் அவர் கைதேர்ந்தவர் ஆக முன்னேறினார்.

இதையும் படிங்க :

அதே சமயத்தில் விராட் கோலி ஒரு கேப்டனாக பேட்ஸ்மேன்களை கூடுதலாக பொறுப்பெடுத்து கொள்ளச் சொன்னார். மேலும் வெளிநாடுகளில் டெஸ்ட் வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு இருந்தார். மேலும் ஐந்து முழுமையான பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் முறையை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த வகையில் இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டில் கேப்டன்கள் ஆக வித்தியாசமானவர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -