சஞ்சு சாம்சனை ஆசிய கோப்பைக்கு கூட்டிட்டு போறதுக்கு காரணம் இருக்கு – தேர்வுக்குழு தலைவர் அகர்கர் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
1591
Samson

ஆகஸ்ட் முப்பதாம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி மதியம் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் அகர்கரால் அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இந்த அணிக்கு காயத்தில் இருந்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள். கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார் என்கின்ற காரணத்தினால், இஷான் கிஷானை இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் மூன்றாவது துவக்க மாற்று ஆட்டக்காரராக அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த அணியில் பேக் அப் வீரராக மட்டுமே மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இளம் 20 வயது திலக் வர்மா 17 பேர் கொண்ட முக்கிய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

தற்பொழுது இதற்கான காரணத்தை விளக்கிய இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது “திலக் வர்மாவை அணியில் எடுத்தது அவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் காட்டிய செயல் திறனுக்காக மட்டுமே கிடையாது. அந்தத் தொடரில் அவர் வெளிப்படுத்திய மனோபாவத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவரை அணியுடன் அழைத்துச் செல்லவும், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கவும் இது வழி செய்கிறது.

அணிக்கு மீண்டும் ஒரு இடது கை ஆட்டக்காரர் கிடைத்திருக்கிறார் அவர் மிகவும் நம்பிக்கை கொடுப்பவராக இருக்கிறார். இப்பொழுது அணியில் 17 பேரை தேர்ந்தெடுக்கலாம் என்பதால் அவரையும் சேர்த்து இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு 15 பேர் எனும் பொழுது அப்பொழுதுதான் முடிவு செய்ய முடியும். இப்பொழுது கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு அவரை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்கள். ஸ்ரேயாஸ் முற்றிலும் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் கே எல் ராகுலுக்கு காயம் இல்லை என்றாலும், அவருக்கு நிக்கில் இருக்கிறது. நாங்கள் இது சம்பந்தமாக பிசியோவிடம் அறிக்கை பெறுவோம். அவர் இரண்டு மூன்று ஆட்டங்கள் விளையாட முடியாமல் போனால் அதற்கான மாற்றை பெறுவோம். இந்த காரணத்தினால் தான் சஞ்சு சாம்சன் எங்களுடன் 18 வது வீரராக வருகிறார்!” என்று கூறியிருக்கிறார்!

ஒருவேளை கே.எல்.ராகுல் முழுவதும் குணம் அடையாமல் இருந்தால், மிடில் வரிசையில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தருவதற்கு பதிலாக, சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு தந்து, அவரையே உலகக் கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த காரணத்தினால் சஞ்சு சாம்சனை 18 வது வீரராக அணியில் வைத்து இலங்கைக்கு ஆசியக் கோப்பைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.