“சூரிய குமாருக்கு இதே வேலையா போச்சு.. அதை யார் செஞ்சும் பாக்கல!” – ஆஸி லெஜன்ட் மார்க் வாக் மனம் திறந்த பேச்சு!

0
29577
Surya

இந்திய அணி எந்த சிரமமும் இல்லாமல், கேஎல்.ராகுல் தலைமையில் மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் இரண்டு போட்டிகளை வென்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கிறது!

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி காட்டி அசத்தியிருக்கிறார்கள். மேலும் அது எதிர்பார்க்காத அளவுக்கு இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்ற ஸ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர்தான், இதுவரையில்குறிப்பிடும்படி எதையும் செய்யாமல் இருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது ஆஸ்திரேலியா தொடரில் முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறிய ஸ்ரேயாஸ், இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.

இந்த நிலையில் முதல் போட்டியிலும் அபாரமாக அரை சதம் விளாசிய சூரியகுமார் யாதவ், இரண்டாவது போட்டியில் வழக்கம்போல் அதிரடியில் உச்சம் தொட்டு 37 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார்.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட இரண்டாவது போட்டியில் அவருடைய வழக்கமான எல்லா ஷாட்களும் வெளிவந்துவிட்டது. கேமரூன் கிரீன் வீசிய ஆட்டத்தின் 44வது ஓவரில், தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். கடைசி பத்து ஓவர்களுக்கு வந்தது அவருக்கு மிக வசதியாக போய்விட்டது. இந்திய அணி உலக கோப்பைக்கு எல்லாப் பெட்டிகளையும் டிக் அடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய லெஜெண்ட் பேட்ஸ்மேன் மார்க் வாக் சூரியகுமார் பற்றி கூறும்பொழுது “அவர் முற்றிலும் தனித்துவமானவர். அவர் அடிக்கும் பகுதிகளில் ஒரு வீரர் பந்தை அடித்து நான் பார்த்ததே கிடையாது. ஃபீல்டர் இல்லாத இடத்தில் பந்தை அடிப்பது அவரது உண்மையான திறமை.

பார்ப்பதற்கு இது என்னவோ மிக எளிமையாகத்தான் தெரிகிறது. ஆனால் இதற்கு பெரிய திறமை வேண்டும். எதிரணியின் ஃபீல்டிங்கை வைத்து விளையாட முடியும். மிக எளிதாக கேப்களை கண்டறிய முடியும். அவர் ஆதிக்கம் செய்யக்கூடியவர்!” ன்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!