வேட்டி, சட்டை என தமிழ்நாட்டு பையனாகவே மாறிய ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்காக திருமண தம்பதி செய்த காரியம்

0
2853

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் என்றால் அது ருதுராஜ் கெய்க்வாட் தான். அவர் பிறந்து வளர்ந்து ரஞ்சி கிரிக்கெட்டு ஆடுவது எல்லாம் மகாராஷ்டிராவுக்கு தான். ஆனால் அவரை தமிழ்நாடு தத்துப் பிள்ளையாகவே பார்த்து வருகிறது.

சொல்லப்போனால் ருதுராஜ்  சென்னை அணியில் விளையாடிய பிறகுதான் அவருக்கு பெயர் புகழ் பணம் எல்லாம் கிடைத்திருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே,  ரஜினியின் இயற்பெயரை குறிப்பிட்டு கெய்க்வாட் என்றாலே தமிழக மக்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த பட்டியலில் நீங்களும் இணைந்து இருக்கிறீர்கள் என்று பாராட்டி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தோனி திருமணம் செய்த பிறகு தான் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றார்.இப்படி பல திருமணங்கள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை உயர்த்திருக்கிறது.

அந்த வகையில் ருதுராஜ் தனது வாழ்க்கை துணையை கிரிக்கெட் களத்திலேயே கண்டெடுத்திருக்கிறார் என்பதுதான் சிறப்பு அம்சமே. மகாராஷ்டிரா மகளிர் அணிக்காக விளையாடும் உட்காஷா என்ற பெண்ணை ருதுராஜ் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமண போட்டோஷூட் ஒன்றில் ருதுராஜ்  வேட்டி சட்டை கட்டிக்கொண்டு தமிழ்நாட்டு பையனாகவே மாறிவிட்டார். இதேபோன்று உட்காஷா சேலை கட்டிக்கொண்டு தமிழ் பெண்ணாகவே மாறி இருந்தார்.

- Advertisement -

இருவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டு முறைப்படி தங்களது திருமண நிகழ்வை நடத்தி முடித்து இருக்கிறார்கள். இது குறித்து ருதுராஜ் ரசிகர்களுக்கு ஒரு மடல் எழுதியிருக்கிறார். அதில் என் மனைவி உட்காஷா என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக எப்போதுமே இருப்பார்.

அவரை எனக்குத் தெரிந்த நாள் முதல் என் வாழ்வில் முக்கிய அங்கமாக அவர் இருக்கிறார்.எங்கள் திருமண முறையை சென்னை மக்களுக்கும் தென்னிந்திய கலாச்சார முறைப்படியும் நடத்த அவர் முடிவு செய்தார்.காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை நகரமும் என் வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அவர் உணர்ந்து இதனை செய்துள்ளார்.

உட்காஷாவின் இந்த முடிவு மிகவும் ஸ்பெஷல் ஆக மாறிவிட்டது. ஐ லவ் யூ உட்காஷா என்று ருதுராஜ் கெய்க்வாட் அந்த மடலை முடித்து இருக்கிறார். தமிழக முறைப்படி தங்களுடைய திருமண பந்தத்தை நடத்தி போட்டோ எடுத்து போட்டு இருப்பது அவர்கள் சிஎஸ்கே மீதும் தமிழக ரசிகர்கள் மீதும் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.