ரிஷப் பண்ட் எனக்காக நீண்டநேரம் ஹோட்டலில் காத்திருந்தார்; இந்த காரணத்தால் நான் அவரை பார்க்கவில்லை – லெஜெண்ட் படத்தின் நாயகி ஓபன் டாக்!

0
379

எனக்காக நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்த ரிஷப் பண்ட்டை என்னால் பார்க்க முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று சமீபத்திய பேட்டியில் லெஜன்ட் படத்தின் நாயகி ஊர்வசி ரவுடேலா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் இடத்தை நிரப்ப சரியான வீரராக கருதப்பட்டு, உள்ளே எடுத்து வரப்பட்டவர் ரிஷப் பண்ட். அதற்காக பல விமர்சனங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என வெளிநாட்டு மைதானங்களில் சதங்கள் விளாசி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வப்போது நடிகைகளுடன் நட்புறவு இருக்கிறது. இது காதலாகவும் இருக்கலாம் என பல கிசுகிசுக்கள் வெளிவருவது உண்டு அப்படியான கிசுகிசு வலையில் ரிஷப் பண்ட் தப்பிக்கவில்லை. சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுகளும் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒருவராக இருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா.

இந்த கிசுகிசுவை உறுதி செய்யும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிஷப் பண்ட் பற்றி மறைமுகமாக பேசி, இருவருக்கும் இடையே நடந்த சம்பவம் ஒன்றையும் பகிந்துள்ளார். அதில் தெளிவாக ரிஷப் பன்ட் பெயரை நேரடியாக கூறி அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்காமல், சுருக்கமாக மிஸ்டர் ஆர்.பி என்று குறிப்பிட்டிருந்தார். அதை வைத்து நாம் ரிஷப் பன்ட் என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“முன்பு ஒரு முறை நான் மற்றும் ஆர்.பி இருவரும் டெல்லியில் சந்திக்கலாம் என்று திட்டமிட்டோம். என்னை சந்திப்பதற்காக அவர் ஹோட்டல் அறைக்கு வந்துவிட்டார். ஆனால் நான் வாரணாசியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டெல்லி வந்தபோது அங்கேயும் திடீரென்று வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிட்டது. அதிலும் கலந்து கொண்டு பின்னர் ஹோட்டல் அறைக்கு வந்தேன். பின்னர் வேலைப்பளு அயற்சியில் அப்படியே ஓய்வெடுக்க சென்றுவிட்டேன். பிறகுதான் கவனித்தேன் 16-17 முறை எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது. ஆர்.பி எனக்காக நீண்ட நேரம் காத்திருந்திருக்கிறார் என்பது பின்னர் தான் நினைவுக்கு வந்தது. இருவரும் சந்திக்கலாம் என்று திட்டமிட்டதையே நான் மறந்து விட்டேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுடேலா இருவரும் தங்களது துறைகளில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். ரிஷபண்ட் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். தற்போது அதற்காக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஊர்வசி ஓரிரு பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் வெளியான தி லெஜெண்ட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இவர் அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது.