ரிங்கு சிங் தன்னைக் காதலிப்பதற்கு எல்லாக் காரணத்தையும் தந்திருக்கிறார் – ப்ரெட் லீ

0
369
Rinku

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசிப் பந்து வரை மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது!

இந்த போட்டியில் கடைசிப் பந்துக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஸ்தீப் சிங் பேசிய அந்தப் பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்!

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி ஐந்து பந்தில் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை வென்று கொடுத்து கொல்கத்தா அணியின் புதிய பினிஷர் ஆக அவதாரம் எடுத்தார்.

அவரது இந்த ஃபினிஷர் அவதாரம் நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. அவருக்கு தற்பொழுது இந்திய அணியில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு வளர்ச்சி உருவாகி இருக்கிறது.

ரிங்கு சிங் பேட்டிங் குறித்து பேசி உள்ள பிரெட் லீ ” ரிங்கு சிங்கை காதலிக்க அவர் எல்லா காரணங்களையும் நமக்கு அளித்துள்ளார். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் தன்னை வெளிப்படுத்தி வெளியே வந்து வெற்றி பெறுகிறார். அவரது ஆட்டம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு. மேலும் அவர் ஒழுக்கமான கிரிக்கெட் விளையாடுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

ரிங்கு சிங் பற்றி பேசி உள்ள பார்த்திவ் படேல் “அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அழுத்தத்தின் கீழ் செயல்படுவது மிகவும் முக்கியமானது. ஒரு வீரராக நீங்கள் உங்களை நினைக்கும் விதத்தையும் உங்கள் மனநிலையையும் இது காட்டுகிறது. ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்ததில் இருந்த திறமையை நேற்றும் பார்த்தோம். இது மிகவும் சவாலானது.

ரசல் பேட்டிங் செய்யும்பொழுது பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்க அவர் முயற்சி செய்ததை நாம் பார்த்தோம். அவர் போன்ற ஒரு வீரரை ஸ்ட்ரைக்கில் வைக்காமல் தானே முன் நின்று ஆட்டத்தை முடித்தார்.

ரிங்கு சிங் பேட்டிங் மற்றும் கேம்களை முடிக்கும் விதம் ஒரு பேசும் புள்ளியாகும். இன்றும் அவர் ஆட்டம் இழக்கவில்லை. மேலும் அவர் அவர்களை வெல்வது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்!” என்று கூறியிருக்கிறார்!