“இந்தியாவுக்கு எதிரா தயாரா இருக்கோம்.. எங்களுடைய திட்டம் இதுதான்!” – இலங்கை கேப்டன் சனகா அதிரடி பேட்டி!

0
1998
Shanaka

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, யுனைடெட் அரபு எமிரேடில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றது.

அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளவே அதிக வாய்ப்பு இருப்பதாக பலரும் கணித்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று இலங்கை ஆசிய சாம்பியன் ஆனது.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய கோப்பைத் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி வரும் என்று பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் வழக்கம்போல இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

கடந்த முறை போல் இலங்கை அணியின் மேஜிக் தொடருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். சிறிய அணியாக எல்லோராலும் கணிக்கப்பட்டு, பின்பு ஆசிய கோப்பையில் மட்டும் இறுதிப் போட்டிக்கு வருவதோடு கோப்பையையும் இலங்கை கைப்பற்றி அசத்தி வருகிறது.

இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் சனகா கூறும்பொழுது “இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு நிச்சயம் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த போட்டி முற்றிலும் ஆடுகளத்தையே சார்ந்து இருக்கிறது. எனவே நாங்கள் அதற்கேற்ற அணியை தேர்ந்தெடுக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதலில் பந்து வீசினால், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அப்பொழுதுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பும்.

நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருக்கிறோம். எங்கள் வீரர்கள் நாட்டிற்கு தங்களால் முடிந்ததை வழங்க விரும்புகிறார்கள். நாங்கள் ஆரம்பத்தில் பின் தங்கியவர்களாக இருந்தோம். பெரிய போட்டிகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

மேலும் குறிப்பாக இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளில் இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது மிகவும் சிறப்பானது. ” எங்களுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் கொடுக்கிறீர்கள்?!” என்று ரசிகர்களிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றன!” என்று கூறி இருக்கிறார்!