இந்திய அணி பண்ண வேலை.. பாகிஸ்தான் அணி அந்த வீக்னஸ் பத்தி எல்லாருக்கும் தெரியும் – ரமீஸ் ராஜா விமர்சனம்

0
185
Rameez

நேற்று பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 15 பேர் கொண்ட அணியில் ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் கூட கிடையாது. இப்படியான நிலையில் பங்களாதேஷ் சுழல் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டி வெற்றி பெற்றார்கள்.

- Advertisement -

இந்திய அணி வெளிப்படுத்திய பலவீனம்

இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும் பொழுது “முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது. நீங்கள் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்தீர்கள். இரண்டாவதாக நம்முடைய வேத பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் நற்பெயர் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த தோல்வியை ஒரு நம்பிக்கை மீது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகும்.

இந்திய அணி ஆசியக் கோப்பையின் கடந்த ஆசியக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை வெளியில் காட்டிவிட்டது. இப்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நம்முடைய வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டது. 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தார்கள்.

- Advertisement -

ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும்

ஷான் மசூத் தற்பொழுது கேப்டனாக தோல்வியில் இருக்கிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றுப் பொழுது சூழ்நிலை கடுமையாக இருந்தது என்று நினைத்தேன். பாகிஸ்தான் அணி அங்கு தொடரை வெல்வது சாத்தியம் கிடையாது. ஆனால் நீங்கள் இப்பொழுது சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோற்று இருக்கிறீர்கள். கேப்டனாக ஷான் மசூத் கண்டிஷனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

இதையும் படிங்க :

மேலும் ஷான் மசூத் தன்னுடைய பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். மேலும் பிஎஸ்எல் மற்றும் கவுண்டி போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -