நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் வந்தது தொடர்பாக ஜாகீர் கான் உடன் விவாதம் செய்ததாக சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல்.ராகுல் டெல்லி அணிக்கு மாறினார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு 27 கோடி ரூபாய்க்கு அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டு கேப்டனாக மாற்றப்பட்டார். எனவே இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் போது தனிப்பட்ட சுவாரசியங்கள் இருந்தது.
பேட்டிங் வரிசையில் ஏழாவது இடம்
நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் என்கின்ற வலிமையான நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் வழக்கம்போல நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வலதுகை வீரர் அப்துல் சமாத் அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் இன்னொரு வலதுகை வீரர் மிட்சல் மார்ஸ் களத்தில் இருந்தார். இடது-வலதுகை காம்பினேஷனுக்காக கூட ரிஷப் பண்ட்டை அனுப்பவில்லை.
இதைத்தொடர்ந்து முகேஷ் குமார் அடுத்தடுத்து இவர்கள் இருவரையும் ஆட்டம் இழக்க வைத்தார். இதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ஆயுஸ் பதோனி இருவரும் அனுப்பப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து ஏழாவது இடத்தில் உள்ளே வந்த ரிஷப் பண்ட் முகேஷ் குமார் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஜாகீர் கானுடன் ஏன் சண்டை?
ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்து களத்தை விட்டு வெளியேறி சென்றதும் வெளியில் இருந்த லக்னோ அணியின் மென்டர் ஜாகீர் கானுடன் காரசாரமாக ஏதோ விவாதம் செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா அங்கு என்ன விவாதம் நடந்தது? என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி செய்வதை நீங்க செய்ய நினைக்காதீங்க.. அவர் பக்கத்துல கூட உங்களால போக முடியாது.. ரிஷப் பண்ட்க்கு புஜாரா அறிவுரை
இதுகுறித்து கூறியிருக்கும் சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது ” பேட்டிங் செய்து முடித்த கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்து விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக களத்தில் 20 ஓவர்கள் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் மெண்டர் ஜாகீர் கானிடம் ‘என்னை நீங்கள் முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பி இருக்க வேண்டும்’ என்று கோபமாக கூறுவது போல இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.