இதுவரை என்னை நீங்கள் பார்த்தது எல்லாம் ஒன்றுமே இல்லை, கிரிக்கெட்டில் என் வாழ்நாள் கனவே அதுதான் – சூரியகுமார் யாதவ் அதிரடி பேட்டி!

0
505

நான் டெஸ்ட் போட்டியில் தான் ஸ்பேசலிஸ்ட் என பேட்டியளித்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

சர்வதேச போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன சூரியகுமார் யாதவ், 2022ல் டி20 போட்டிகளில் மட்டும் 1000+ ரன்கள் கடந்து அடித்திருக்கிறார். இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

- Advertisement -

தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டு வரும் இவரை ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி சமீப காலமாக பயன்படுத்தி வருகிறது. இடைவிடாமல் தன்னை நிரூபித்து வரும் இவருக்கு விரைவில் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும், தற்போது டெஸ்ட் போட்டியும் அதிரடியான போட்டியாக மாறி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி டி20 உலக கோப்பை தொடர் நடந்தபோது சூரியகுமார் யாதவ் பற்றி பெருமிதமாக பேசினார்.

இந்திய அணி நிர்வாகமும் சூரியாகுமாருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க பரிசீலனை செய்து வருகிறது. புதிய தேர்வுக்குழு இது குறித்து முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில் டெஸ்ட் போட்டிகள் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் சூரியகுமார்.

“நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினேன். டெஸ்ட் போட்டிகளின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு தான் லிமிடெட் ஓவர் போட்டிகளில் எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஐபிஎல் போட்டிகள் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உந்துகோளாக இருந்தது.

- Advertisement -

எனது ஆரம்ப கட்ட கிரிக்கெட்டிலேயே நான் முடிவு செய்து விட்டேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது தான் எனது நீண்ட கால கனவு. இந்தியா போன்ற அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள். அதற்காகத்தான் இத்தனை வருடங்கள் காத்திருக்கிறேன். டி20 போட்டிகளில் மட்டுமே என்னை கவனித்து வந்த ரசிகர்களுக்கு, எனது டெஸ்ட் ஆட்டம் நிச்சயம் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்வேன். ரசிகர்களையும் மகிழ்விப்பேன்.” என்றார் சூரியகுமார்.