அடுத்து என்ன சரோஜாதேவி சோப்பு டப்பாவா?.. பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிதாப நிலைமை.. ஆட்டநாயகன் விருது சுவாரசியம்

0
125
PSL

இந்த ஆண்டு பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 லீக்கில் ஆட்டநாயகன் விருதுக்கு தரப்பட்டு இருக்கும் பரிசு பொருள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது குறித்து தற்போது சமூக வலைதளங்களில் நிறைய ட்ரோல்கள் சென்று கொண்டிருக்கிறது.

வழக்கமாக பிஎஸ்எல் டி20 லீக் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே நடைபெற்று முடிந்து விடும். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடர் அந்த நேரத்தில் நடைபெற்ற காரணத்தினால், தற்போது ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பிஎஸ்எல் தொடரும் நடைபெறுகிறது.

- Advertisement -

அதிரடியாக ஆரம்பித்த பிஎஸ்எல்

இதில் முல்தான் சுல்தான் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டியில் முதலில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 105 ரன்கள் குவித்தார். முல்தான் சுல்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து விளையாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து கராச்சி கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பரிதாபமான ஆட்டநாயகன் விருது

இந்த நிலையில் கராச்சி கிங்ஸ் அணிக்கு அதிரடி சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆட்ட நாயகன் விருதுக்கு பரிசுப் பொருளாக தலைமுடியை உணர்த்தும் ஹேர் டிரையர் வழங்கப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒரு லட்சத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சம் வரையில் இப்படியான பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்எல் தொடரில் ஆயிரம் ரூபாய்க்கு மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பொருளை வழங்கி இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க : பும்ராவுக்கு எதிரா என் பிளான் இதுதான்.. வேற வழியும் எனக்கு அப்ப இல்ல – கம்பேக் கருண் நாயர் பேட்டி

இந்த நிலையில் ஆங்கில கிரிக்கெட் வெப்சைட்டுகளில் அடுத்து என்ன மிக்சர் டப்பா கொடுக்கப் போகிறீர்களா? என்று கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் தமிழ் பக்கமாக அடுத்து என்ன சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவா? என்று ரசிகர்கள் பெரிய அளவில் கிண்டல் கேலிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்த விஷயம் உலகெங்கும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

- Advertisement -