கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“எங்க பிளான்.. இவர வச்சுதான் இந்தியாவ கண்ட்ரோல் பண்ண போறோம்!” – கம்மின்ஸ் ஓபன் ஸ்டேட்மென்ட்!

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய பலராலும் சொல்லப்பட்டு வருகிறது!

- Advertisement -

அதே சமயத்தில் அந்த அணிக்கு கடந்த ஒரு மாதத்தில் திடீரென எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்க ஆரம்பித்து, தற்பொழுது ஒரு அணியாக அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டிய ஆரம்ப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயம் அடைந்து தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடாதது பெரிய பின்னடைவாக தற்பொழுது மாறி இருக்கிறது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இரண்டுக்கு மூன்று என ஆஸ்திரேலியா இழந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் அந்தத் தொடரில் விளையாடாத நட்சத்திர வீரர்கள் அனைவரும் தற்பொழுது இந்திய தொடரில் இடம் பெற்று இருக்கிறார்கள். இப்பொழுது தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும். மேலும் காயத்திலிருந்து வந்த வீரர்கள் அனைவரும் பழைய நிலைமைக்குத் திரும்பி ஒரு அணியாக கட்ட அமைய வேண்டும்.

இப்படி ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் இருந்து மீண்டும் உலகக் கோப்பைக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு நடுவே மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
” ஆடம் ஜாம்பா! அவர் ரன் ரேட்டை குறைப்பதில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். இதுதான் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் இறுதிக்கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களால் கூட இதைச் செய்ய முடியாமல் போகலாம். இது அவர்களுக்கு சற்று கடினமான ஒன்றாக மாறலாம்.

போட்டியின் பந்துவீச்சை போது நான் அவருக்கு இறுதி கட்டத்தில் வீசுவதற்காக, அவருடைய ஓவர்களில் மூன்று அல்லது நான்கு ஓவர்களை வைத்திருந்தால் நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts