ஓய்வு முடிவை மாற்றிய அம்பத்தி ராயுடு… திடீரென்று ட்விஸ்ட் கொடுத்துட்டாரே! – ராயுடு வெளியிட்ட அறிக்கை!

0
18758

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தனது முடிவை மாற்றி புதிய அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2010 முதல் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி மூன்று முறை கோப்பைகளை வென்றிருக்கிறார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். சிஎஸ்கே அணியுடன் பயணித்து 6 சீசன்களில் 3 முறை கோப்பைகளை வென்றிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் பைனலுக்கு முன்பு, “204 போட்டிகள், 11 பிளே-ஆப் மற்றும் 5 கோப்பைகள் வென்றிருக்கின்றேன். பைனல் தான் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்று பதிவிட்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் பைனல் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்தது. 5ஆவது முறையாக சிஎஸ்கே கோப்பையை வென்றது. ராயுடுவிற்கு இது 6ஆவது கோப்பையாகும். சிஎஸ்கே அணிக்காக தோனி கோப்பையை பெறும்போது, ராயுடுவை அழைத்து பெறவைத்தார். நெகிழ்வான பல சம்பவங்கள் பைனல் முடிந்த பிறகு நடந்தது.

இந்நிலையில் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு முடிவை மாற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் பிரிவு பெறுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.

- Advertisement -

“ஐபிஎல் கோப்பையை வென்றபிறகு, இரவு முழுவதும் எனக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த உயரிய தருணத்தில், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். சிறுவனாக இருக்கும்பொழுது, நான் கிரிக்கெட் பேட்டை எடுத்து டென்னிஸ் பந்தில் விளையாடிய போது, இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இந்த 30 வருடங்கள் மிகச்சிறந்த பயணமாக அமைந்தது.”

“அண்டர்-15 காலத்தில் இருந்தே, நான் இந்திய அணைக்காக விளையாட ஆரம்பித்து, விளையாடி வருகிறேன். 2013ஆம் ஆண்டு சீனியர் அணிக்காக விளையாட முதன்முறையாக எனக்கு வாய்ப்பு கிடைத்ததை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.”

“இந்த தருணத்தில் பிசிசிஐ, ஆந்திர பிரதேசம் கிரிக்கெட் வாரியம், ஹைதராபாத், விதர்பா, பரோடா கிரிக்கெட் வாரியம் என எனக்கு வாய்ப்புகள் கொடுத்து நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”

“தோனியின் கீழ் இந்திய அணியிலும் சிஎஸ்கே அணியிலும் விளையாடியதை பெருமிதமாக கருதுகிறேன். கடந்த 20 வருடங்களில் இருவருக்கும் இடையே நிறைய நினைவுகள் இருக்கிறது. இதை என் காலம் உள்ளவரை நான் மறக்கமாட்டேன்.”

“என்னுடைய தந்தை எனது கிரிக்கெட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். என்னுடைய குடும்பம் இதுவரை பக்கபலமாக இருந்திருக்கிறது. என்னுடைய ரசிகர்கள், அணியின் வீரர்கள், அணி நிர்வாகிகள், சிறுவயது முதல் இப்போது வரை என்னுடன் இருந்த கோச் என அனைவருக்கும் இதை நன்றி தெரிவிக்கும் தருணமாக எடுத்துக்கொள்கிறேன்.” என அறிக்கையில் குறிப்பிட்டார்.