UAE கிட்ட நியூசிலாந்து தோத்ததுக்கு காரணம் ஐபிஎல்தான் – அஷ்வின் ஆச்சரியப்படுத்தும் பேச்சு!

0
1006
Ashwin

நேற்று துபாய் மைதானத்தில் நியூசிலாந்து யுனைடெட் அரபு எமிரேடு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களில் எட்டி முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை யுனைடெட் அரபு எமிரேடு அணி பெற்று இருக்கிறது.

நியூசிலாந்து அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக யுனைடெட் அரபு எமிரேடுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணி யுஏஇ அணியிடம் தோற்று இருக்க வேண்டியது. ஆனால் வெற்றி பதட்டத்தில் ஆட்டத்தை முடிக்கும் அனுபவம் இல்லாத காரணத்தால் யுஏஇ பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து வெளியேறி விட்டார்கள்.

இந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் எடுத்துக் கொண்டால் டெஸ்ட் அந்தஸ்து பெறாத யுஏஇ அணியின் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பௌலிங் என மூன்று துறைகளின் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது. அவர்களது திட்டங்கள் சரியாக இருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு சிறிய அணிப்போல் தெரியவே இல்லை.

டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்தில் கூட ஆட்டம் மாறலாம் என்பதுதான் நிலைமை. ஆனாலும் சர்வதேச அளவில் பெரிய அணிகள் முன்பு சிறிய அணிகளை மிக எளிதாக வீழ்த்தி வந்திருந்தன. ஆனால் தற்காலத்தில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் எந்த ஒரு அணியையும் சிறிய அணியாக எடுத்துக் கொள்ளவே முடியாத நிலைமைதான் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்
“யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் இது பிரான்சிஸைஸ் கிரிக்கெட்டின் வெற்றி எப்படி என்பதையும் காட்டி இருக்கிறது. அடுத்த தலைமுறையின் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் டெஸ்ட் அந்தஸ்து பெறாமல் இருக்கும் சிறிய கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல செய்தி.

ரஷீத் கான் முதன் முதலில் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்த பொழுது, உலகக் கோப்பை மாதிரியான பெரிய போட்டிகளில் பெரிய அணைகளுக்கு எதிராக ஆப்கான் அணி விளையாடுவதற்கான அச்சத்தை அது நீக்கியது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. இனி இதே போல் மற்ற நாட்டின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் இடம்பெற்று எல்லாவற்றையும் மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!