சிஎஸ்கே அணி பற்றிய பேச்சுக்கு நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்ப்பு ; உடனே அந்தர் பல்டி அடித்த டெவோன் கான்வே!

0
5947
Conway

ஐபிஎல் 16ஆவது சீசனில் இறுதிப்போட்டியில் 25 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து, ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்தின் இடதுகை வீரர் டெவோன் கான்வே வென்றார்!

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதற்குப் பிறகு அவர் குறிப்பிடும் பொழுது “தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். ஐபிஎல் இறுதிப் போட்டியின் வெற்றியை விட எதுவும் மிகப்பெரியதாக எனக்கு இல்லை. சக இடதுகை ஆட்டக்காரரான மைக் ஹஸ்சிக்கு பெருமைகள் சேரும். அவரது இடத்திலிருந்து நான் விளையாடுவது மகிழ்ச்சியானது!” என்று குறிப்பிட்டிருக்கிறார்!

- Advertisement -

இதற்கு நியூசிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அதைவிட இது பெரிய வெற்றி கிடையாது என்று நியூசிலாந்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

நியூசிலாந்து ரசிகர்களின் இந்த எதிர்ப்பின் காரணமாக உடனடியாக தனது கருத்தை மாற்றிக்கொண்டு கான்வே புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இது எனது வாழ்க்கையின் டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வெற்றி என்று கூறுவேன். ஆனால் இதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி என்று நான் கூற மாட்டேன். ஆனால் நிச்சயமாக இது என் டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி.

- Advertisement -

மேலும் நியூசிலாந்து அணிக்காக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது நிச்சயமாக மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன்.

ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதியில் நான் சில ஆட்டங்களைப் பெற்றதற்கு அதிர்ஷ்டம் உள்ளவனாக இருந்தேன். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ஒரு வீரனாக, இந்த இடத்தில் அழுத்தம் எப்படி இருக்கிறது? அணி நிர்வாகம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது? என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் முதல் ஆட்டத்தில் இருந்து கிடைத்த ஆதரவு, நிச்சயமாக என்னை முன்னோக்கி நகர்த்தவும், போட்டி முழுவதும் வேகத்தை உருவாக்கவும் உதவியது!” என்று அவர் கூறியிருக்கிறார்!