அயர்லாந்து தொடருக்கு புதிய கேப்டன் ; அணிக்கு திரும்பும் முக்கிய வீரர் ; வெளியான புதிய தகவல்கள்!

0
2330
Ict

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகிறது!

இந்திய அணி தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி முடித்துக் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முடிவடைகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைகிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி அங்கிருந்து நேராக அயர்லாந்து நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு மிக முக்கியமாக ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரும், இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடக்க இருக்கிறது. எனவே இதில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.

- Advertisement -

இந்த காரணத்தால் அயர்லாந்து செல்லும் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது. அவர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீசில் முடித்துக் கொண்டு, தன் உடல் நிலையை எப்படி உணர்கிறாரோ அதை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும் என்று பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹர்திக் பாண்டியா செல்லவில்லை என்றால் துணை கேப்டனான சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சில போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடும் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது.

அதே சமயத்தில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கின்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ட்ப்ரித் பும்ரா அயர்லாந்து தொடரில் அணிக்கு திரும்புவார் என்று பிசிசிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.