பெரிய போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்று தோனியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் – கேப்டனின் கேப்டன் சவுரவ் கங்குலி மனம் திறந்த பாராட்டு!

0
9185
Dhoni

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ருத்ராஜ் அரை சதத்துடன் 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சேசிங் செய்வதில் மிகப்பெரிய சாதனையை வைத்திருக்கிற அணியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் இரண்டாவது பேட்டிங் செய்கையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆன் -ஃபீல்டு கேப்டன்சி மேஜிக் போல இருந்தது.

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம் மற்றும் பீல்டிங் பொசிஷன்களை வைத்த விதம் என்று மகேந்திர சிங் தோனி தனது கேப்டன்சி திறமையை மொத்தமாக அந்த போட்டியில் இறக்கி இருந்தார்.

அவரது கேப்டன்சி திறமைக்கான முத்திரை போட்டியாக இந்த போட்டி அமைந்திருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் மகேந்திர சிங் தோனியை பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது மகேந்திர சிங் தோனி அறிமுகமான பொழுது அவருக்கு கேப்டனாக இருந்த முதல் கேப்டன் சௌரவ் கங்குலியும் சென்னை மற்றும் மகேந்திர சிங் தோனியைப் பாராட்டி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து கங்குலி கூறும் பொழுது
“சென்னை அணி மற்றும் மகேந்திர சிங் தோனி அற்புதமாக இருந்தனர். பெரிய போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்று அவர்கள் மற்றவர்களுக்கு காட்டி இருக்கின்றனர். மகேந்திர சிங் தோனியில் கேப்டன்ஷியில் தனித்துவமானவர். பெரிய போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்று அவர் காட்டியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ஜிதேந்தர் சர்மா சிறப்பாக விளையாடி உள்ளனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஐபிஎல் ஒரு மிகப்பெரிய தொடர். இப்படியான தொடரில் இவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டது நல்ல விஷயம்!” என்று கூறியிருக்கிறார்!