கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வீடியோ.. ரஞ்சி காலிறுதி.. சப்ராஸ்கான் தம்பி இரட்டை சதம்.. பட்டையை கிளப்பும் பேட்டிங்

கடந்த மாதம் துவங்கிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கால் இறுதி சுற்றுகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதன் ஒரு போட்டியில் மும்பையில் பரோடா மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கிறது. நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை அணியின் அனுபவ வீரர்களான பிரிதிவி ஷா மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் ஏமாற்றம் தந்த நிலையில், தனி ஒரு வீரராக சப்ராஸ்கான் தம்பி முஷீர் கான் போராடி ஆட்டம் இழக்காமல் சதம் அடித்திருந்தார்.

இன்று தொடர்ந்து விளையாடிய முசிர்
கான் மிகச் சிறப்பாக விளையாடி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை மும்பை மாநில அணிக்காக அடித்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியில் சிவம் துபே கடந்த போட்டியில் காயம் அடைந்தார். இதன் காரணமாக எஞ்சி இருக்கும் ரஞ்சி போட்டி காண மும்பை அணியில் இருந்து அவர் வெளியேறினார்.

இதன் காரணமாக அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரண்டு சதங்கள் அடித்து பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்த மொசீர் கானுக்கு மும்பை அணியில் முக்கியமான காலிறுதி போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் நேற்று சதம் அடித்ததோடு நின்று கொள்ளாமல், இன்று தொடர்ந்து விளையாடி இரட்டை சதம் அடித்தது மட்டுமில்லாமல் ஆட்டம் இழக்காமலும் களத்தில் நின்றார்.

இன்று இரண்டாம் நாளில் முசீர் கான் 357 பந்துகளில் 18 பவுண்டரிகள் உடன் 203* ரன்கள் குவித்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்கள் குவித்திருக்கிறது. தொடர்ந்து விளையாடிய பரோடா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருக்கிறது.

Published by