ராயுடு போய்ட்டாரு.. நீங்க வாங்க! யோகி பாபுவை சிஎஸ்கேக்கு அழைத்த தோனி..! ஆனால் இதை மட்டும் கவனியுங்கள்

0
1306

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக களம் காண்கின்றார். சமீபத்தில் தனது 42 வது நாள் பிறந்த நாளை கொண்டாடிய மகேந்திர சிங் தோனி நேற்று மாலை சென்னை வந்தார்.

தோனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி வைத்திருக்கும் தல முதல் படமாக lets get married என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானிகா, நதியா, யோகி பாபு உள்ளிட்டு நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தப் படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தோனி பங்கேற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்போது இந்த படத்தில் நடித்த யோகி பாபு குறித்து தோனி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

யோகி பாபு தோனியின் தீவிர ரசிகர் ஆவார். இதற்காக தோனி அவர் கையெழுத்து போட்ட பேட்டையும் பரிசாக யோகி பாபுவுக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ராயுடு இல்லை.

அந்த இடம் காலியாக இருக்கிறது. அதில் விளையாட யோகி பாபுவை களம் இறக்க அணி நிர்வாகத்துடன் நான் பேசுவேன். நீங்கள் தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறீர்கள். ஐபிஎல் தொடருக்கு முன்பு உங்களுடைய சூட்டிங் எல்லாம் முடித்து விடுங்கள்.

- Advertisement -

ஏனென்றால் விளையாட வந்துவிட்டால், அதில் மட்டும் தான் கவனமாக நீங்கள் இருக்க முடியும். சூட்டிங்கிற்கு எல்லாம் உங்களால் செல்ல முடியாது. ஆனால் இன்னொரு விஷயத்தையும் நான் கண்டிப்பாக உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

எதிரணி பந்துவீச்சாளர்கள் அதிவேகமாக பந்து வீசுவார்கள். உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பந்துகள் எறியப்படும். அதையும் நீங்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தோனி சிரித்தார்.இதை போன்று தீபக் சாகர் குறித்து பேசிய தோனி தீபக்சாகர் ஒரு போதை பொருள் போன்றவர்.

அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கஷ்டமாக இருக்கும் தீபக்சாகருக்கு கொஞ்சம் பக்குவம் வந்து கொண்டிருக்கிறது. எனினும் அவர் முழு பக்குவச்சாலையாக ஆவது என் வாழ்நாளில் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தோனி கிண்டல் அடித்துள்ளார்.