சிஎஸ்கே கூட முகேஷ் குமார் பண்ண பைத்தியக்காரத்தனம்.. எனக்கு கோபம் ஆயிடுச்சு – குல்தீப் யாதவ் பேட்டி

0
65
Axar

சிறப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சக டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் முகேஷ் குமார் செய்த விஷயம் தன்னை கோபப்படுத்தியதாக நகைச்சுவையாக குல்தீப் யாதவ் கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் இறுதியாக டெல்லி அணியில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி எந்த இடத்திலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியை காட்டவில்லை. எனவே இந்த குறிப்பிட்ட போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியின் வெற்றி ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு முன்பாகவே முடிவாகிவிட்டது.

- Advertisement -

மீண்டும் கலக்கிய டெல்லி

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியும் வென்று எப்போதும் இல்லாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்று சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு டெல்லி அணியின் வீரர்கள் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஆர் சி பி அணிக்காக விளையாடி வரும் குர் னால் பாண்டியாவிடம் நகைச்சுவையான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்கள். தற்போது அந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

முகேஷ் குமார் செய்த காரியம்

முதலில் குர்னால் பாண்டியாவிடம் குல்தீப் யாதவ் பேசும் பொழுது “கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் முகேஷ் குமார் என்ன செய்தார் தெரியுமா? சிஎஸ்கே அணிக்கு ஒரு பந்தில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பௌலிங் செய்த முகேஷ் குமார் கடைசி பந்துக்கு பீல்டிங் செட் செய்ய மட்டும் நான்கு நிமிடம் எடுத்துக் கொண்டார். என்னை டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்து, சென்னை வெயிலில் உள் வட்டத்திற்கு வர சொன்னார். அந்தப் பைத்தியக்காரத்தனமான முடிவை கேட்டதும் கோபம் வந்துவிட்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க : நீங்க தோனிய விமர்சிங்க ஆதரவு தரேன்.. ஆனா இதை ஏத்துக்க மாட்டேன் – இர்பான் பதான் பேட்டி

இதற்கடுத்து இந்த உரையாடலில் கலந்து கொண்ட அக்சர் படேல் பேசும் பொழுது “எல்லோரும் குல்தீப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் கவர் திசையில் இருந்தேன் அவரோ டீப் ஸ்கொயர் லெக்கில் வெளியே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் முகேஷ் குமார் அவரை உள்ளே அழைத்தார். அதற்கு அவர் நானெல்லாம் வரமாட்டேன் நீங்களே பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். நான் முகேஷ் குமார் இடம் ஏன் இந்த சென்னை வெயிலில் அவரை ஓட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன்” என நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

- Advertisement -