இனி நீ ரோஹித் இல்ல.. நோ- ஹிட் சர்மா..உன் பேரை மாத்திக்கோ ரோஹித்! ஸ்ரீகாந்த் கடும் தாக்கு

0
5488

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களாக சொதப்பி வருகிறார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா வெறும் 268 ரன்கள் தான் அடித்தார்.

இதில் சராசரி வெறும் 19 ரன்கள் தான். இதேபோன்று நடப்பு ஐபிஎல் சீசனிலும் ரோகித் சர்மா பத்து போட்டிகளில் விளையாடி 184 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி வெறும் 18 ரன்கள் தான். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய நான்கு இன்னிங்ஸில் மொத்தமாகவே 5 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். நேற்றைய சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா தேவையில்லாமல் ஒரு ஸ்கூப் சாட் ஆடினார். அது நேராக பில்டரிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 16 ஆவது டக் அவுட்டை ரோகித் சர்மா பெற்றார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ரோகித் சர்மாவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா நீங்கள் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். ரோகித் என்பதை நோ- ஹிட் சர்மா என மாற்றி கொள்ளுங்கள்.  நான் மட்டும் மும்பை அணி கேப்டனாக இருந்திருந்தால் உங்களை அணியை விட்டு நீக்கி இருப்பேன் என்று கடுமையாக சாடினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பத்து போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் எஞ்சிய நான்கு போட்டிகளில் மும்பை அணி நான்கிலும் வென்றால் 18 புள்ளிகளை பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க முடியும்.நேற்றைய ஆட்டத்தில் கூட மும்பை அணியின் நட்சத்திர இளம் வீரர் திலக் வருமா களமிறங்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடாமல் நம்பர் மூணாவது வரிசையில் விளையாடி சொதப்பினார். இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.இதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே விட சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணி தோல்வியை தழுவி இருக்கிறது.