“கோலி ஓய்வு பெற்று டெஸ்டில் மட்டுமே விளையாட வேண்டும்” – அக்தர் கருத்துக்கு கங்குலி தரமான !

0
1590
Ganguly

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முழுமையாக நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.

சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் மிக அதிகமாக இருக்கின்றது. இதுவே இந்தியா அணிக்கு ஒரு தனி அழுத்தத்தையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ள 49 சதங்களை விராட் கோலி முறியடிப்பாரா என்கின்ற தனி விவாதமும் கிரிக்கெட் மட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

விராட் கோலி தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 46 சதங்கள் விளாசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேற்கொண்டு உலகக் கோப்பை முடிவதற்குள் நான்கு சதங்கள் பெற்று ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலி தனது கிரிக்கெட் எதிர்காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? ஏன் அவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறியிருக்கும் பொழுது ” இந்த உலக கோப்பைக்கு பிறகு அவர் அதிக 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்று நான் பார்க்கவில்லை. மேலும் அவர் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது, அவரது நேரத்தை வீணாக்கும் ஒன்று. அவர் இன்னும் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளாவது கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் சாதனையை அவர் முறியடிக்கும் திறன் பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள நூறு சதங்கள் என்ற சாதனையை அவர் முறியடிக்க வேண்டும்! என்று பேசியிருந்தார்!

தற்பொழுது இது குறித்து சவுரவ் கங்குலி இடம் கேட்ட பொழுது “ஏன்? விராட் கோலி எந்த கிரிக்கெட் வடிவத்தில் விளையாட விரும்புகிறாரோ அவர் அதில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனென்றால் அவர் எல்லா வடிவத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்!” என்று அக்தரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசி இருக்கிறார்!