ரோகித் பாய் கிட்ட இருந்து 2 முக்கியமான விஷயம் கத்துக்கிட்டேன்.. கம்பீர் இத சொல்லி இருக்காரு – ஜெய்ஸ்வால் பேச்சு

0
79
Rohit

இந்திய அணியின் இளம் நம்பிக்கைத் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோகித் சர்மாவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டேன் என்பது குறித்து கூறியிருக்கிறார். மேலும் பயிற்சியாளர் கம்பீர் தனக்கு என்ன மாதிரியான சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்றும் பேசியிருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் நவம்பர் மாதத்தில் செல்ல இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலி எப்படி செயல்படுவார் என்று இருக்கும் எதிர்பார்ப்பிற்கு ஈடாக ஜெய்ஸ்வாலுக்கும் இருக்க செய்கிறது. நாளை தொடங்கும் இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலீப் டிராபியில் ஜெய்ஸ்வால் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்

இந்த நிலையில் ரோஹித் சர்மா குறித்து பேசிய ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “நான் அவருடன் பேட்டிங் செய்யும் பொழுதெல்லாம், அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அவர் தன்னுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் ஆட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் புரிந்து கொள்ளும் விதம் அபாரமானது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

உங்கள் பேட்டிங்கை வேகப்பந்து வீச்சுக்கு தகுந்த ஆடுகளத்தில் மாற்றுவது மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு தகுந்த ஆடுகளத்தில் மாற்றுவது, ஒன்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் விழும் பொழுது உங்கள் பேட்டிங்கை மாற்றுவது போன்ற விஷயங்களை நீங்கள் ரோகித் சர்மாவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். இப்போது நிலைமைகள் எப்படி இருக்கிறது என்றும், ஆட்ட சூழ்நிலை குறித்தும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

கம்பீர் தந்த சுதந்திரம்

மேலும் கம்பீர் குறித்து ஜெய்ஸ்வால் கூறும் பொழுது ” நான் கம்பீர உடன் இலங்கைத் தொடரின் போது பேசினேன். அவர் என்னை வெளியே சென்று சுதந்திரமாக என் இஷ்டத்திற்கு விளையாடும் படியும் அவர் எப்பொழுதும் என்னை ஆதரிப்பார் என்றும் கூறினார். இது எனக்கு மிகவும் நம்பிக்கையை அளிக்கிறது அச்சம் இல்லாமல் விளையாட உதவுகிறது.

இதையும் படிங்க :

துலீப் டிராபி மற்றும் இரானி டிராபி போன்ற உள்நாட்டுத் தொடர்களில் இருந்து நீங்கள் மிகவும் கற்றுக் கொள்கிறீர்கள். மேலும் இப்படி ஆன தொடர்கள் உங்களுக்கு சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் தீவிரமான டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு முன்பாக இப்படியான உள்நாட்டு தொடர் தேவையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -