“உங்கள் நம்ப முடியாத பயணத்தில் நானும் கொஞ்சம் இருந்திருக்கிறேன்..!” – கோலிக்கு யுவராஜ் சிங் வெளியிட்ட உருக்கமான வாழ்த்து!

0
1485
Virat

தற்போதைய கிரிக்கெட் உலகத்தின் ராஜாவாக இருந்து வரும் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பல முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள், பல்துறை பிரபலங்கள் என வாழ்த்துக்கள் வந்து சமூக வலைதளங்களில் குவிந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் இன்று அவருடைய பிறந்தநாளில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இதன் காரணமாக இன்றைய போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி இருக்கிறது. விராட் கோலியின் பிறந்த நாளை சிறப்பிப்பதற்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் தனித் தாக்கம் தரக்கூடிய வீரராக விளங்கிய யுவராஜ் சிங் விராட் கோலிக்கு நீண்ட பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை மிக உருக்கமாக வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பிறந்தநாள் வாழ்த்தில் அவர் கூறும்பொழுது “நீங்கள் இளைஞராக அணிக்குள் வந்த பொழுது வாய்ப்புகளுக்காக ஆர்வமும், செயல்படுவதற்கான பசியும் கொண்ட வீரராக இருந்தீர்கள். எங்கள் மகத்துவத்திற்காக விதிக்கப்பட்டவர் என்பது அப்போதே தெரிந்தது.

நீங்கள் உங்களுக்கு என முத்திரையை பதித்து இருந்தாலும் கூட, நீங்கள் மற்றவர்களும் சிறந்து விளங்குவதற்கு முன்மாதிரியாக இருந்து தூண்டுதல் செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் செய்யும்பொழுதும், நீங்கள் செய்தவற்றை சிந்திப்பதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.

இந்த நம்ப முடியாத பயணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். ஆரம்பத்தில் இருந்து வளர்ந்து வருவதை பார்த்து வருவதிலும் பெருமை அடைகிறேன்.

உங்களது ஆர்வமும் உறுதியும் உங்களையும் இந்திய அணியையும், உலகில் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும். கோப்பையை வென்று நமது தேசத்தை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்துங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விராட் கோலி!” என்று கூறியிருக்கிறார்!