வார்னர் என்ன பண்ணாரு தெரியுமா? எஸ்ஆர் ஹெச் அமைதியா இருந்ததற்கு பாராட்டனும்.. அதிர்ச்சியை கிளப்பிய இர்பான் பதான்

0
2620

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புரியாத புதிராக ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏன் டேவிட் வார்னரை அணியிலிருந்து தூக்கியது என்பதுதான். ஏனென்றால் 2014 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் உடல் பொருள் ஆவியை கொடுத்திருக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது அதிக ரன்கள் விளாசி, மூன்று முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்று கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட டேவிட் வார்னரை 2021 ஆம் ஆண்டு  சரியாக விளையாடவில்லை என்று காரணத்தினால் அணியை விட்டு தூக்கியது.

- Advertisement -

மேலும் டேவிட் வானர் விளையாடிக் கொண்டிருந்தபோதே அவரை கேப்டன் பதவி விட்டும் நீக்கியது. இது ரசிகர்கள் மத்தியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இர்ஃபான் பதான் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார்.

அதைக் கேட்டவுடன் ஓ இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து பேசிய இர்பான் பதான், டேவிட் வார்னர் ஏன் ஹைதராபாத் அணியிலிருந்து நீக்கப்பட்டார்? வார்னருக்கும் எஸ் ஆர் ஹெச் அணிக்கும் இடையே அப்படி என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியும்.

ஆனால் இந்த காரணத்தை வெளியே சொல்லாமல் அமைதி காத்த சன்ரைசர்ஸ் நிர்வாகத்தை உண்மையிலேயே நாம் பாராட்ட வேண்டும் என்று இர்பான் பதான் கூறி இருக்கிறார். இந்த பேச்சு இணையதளத்தில் பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

டேவிட் வார்னர் எப்போதுமே மது பழக்கத்திற்கு அடிமையானவர். பலமுறை மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்டு கெட்ட பெயர் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் டேவிட் வார்னர் மது அருந்திவிட்டு யாரிடமாவது தவறாக நடந்து கொண்டிருக்கலாம் என்றும், இதனால் கடுப்பான சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியை விட்டு தூக்கியது என்றும் ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் அது காவ்யா மாறன் ஆக கூட இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டேவிட் வார்னர் அவ்வாறு தவறு செய்திருந்தால் அவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விட்டிருக்கக்கூடாது என்றும் ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த காரணத்தையும் வெளியே சொல்லாமல் அவரைக் காப்பாற்றி இருக்கிறது என்றும் தற்போது புகழ்ந்துள்ளனர். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.