ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளும் இன்னும் ஏழு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இருக்கிறது.
தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் அணி 11 போட்டிகள் விளையாடி 8 வெற்றி 3 தோல்வி என பதினாறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டியில் விளையாடி ஏழு வெற்றி உடன் 15 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியலில் யாருக்கு வாய்ப்பு:
மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி என 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளுடன் 13 புள்ளிகளுடன் உள்ளது. ஆறாவது இடத்தில் கொல்கத்தா அணி 11 புள்ளிகளுடன் உள்ளது. ஏழாவது இடத்தில் லக்னோ அணி 10 புள்ளிகள் உள்ளது.
இந்த சூழலில் குஜராத் மற்றும் பெங்களூர் அணி நெஞ்சிருக்கும் மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட தகுதி பெற்றுவிட முடியும். பஞ்சாப் அணி எஞ்சிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மும்பை அணியை பொறுத்தவரை எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
கொல்கத்தா அணி எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாக மாறிவிடும். முதலில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க:
இந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவார்களா இல்லை இங்கே தங்கி இருந்து பயிற்சி மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.