525 ரன்.. காயத்திலிருந்து திரும்பி வந்து கேப்டன் ருதுராஜ் அசத்தல்.. தமிழக ஜெகதீசன் சிறப்பான ஆரம்பம் – துலீப் டிராபி 2024

0
116
Ruturaj

தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்று போட்டியில் ருதுராஜ் கேப்டனாக இருக்கும் இந்திய சி அணி பிரம்மாண்ட ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது.

இந்தியா பி மற்றும் இந்தியா சி துலீப் டிராபி இரண்டாவது சுற்று போட்டியில் மோதி வருகின்றன. இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா பி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இரண்டாவது பந்தில் ருதுராஜ் காயம்

நேற்று போட்டியின் முதல் நாளின் முதல் பந்தில் பவுண்டர் அடித்து ஆரம்பித்த கேப்டன் ருதுராஜ் இரண்டாவது பந்தில் காயமடைந்து உடனேயே வெளியேறினார். மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 111 மற்றும் பாபா இந்திரஜித் 78 ரன்கள் எடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து விக்கெட் சரிந்ததால் காயத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் மீண்டும் திரும்பி வந்து நேற்றைய நாளில் ஆட்டம் இழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். இந்தியா சி அணி நேற்று ஆறு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

இரண்டாவது நாள் ஆட்டம்

இன்று தொடர்ந்து விளையாடிய இந்தியா பி அணி 525 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ருதுராஜ் 58 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் மானவ் சுதார் 82 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் அன்சூல் காம்போஜ் 38ரன் எடுத்தார். பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சாகர் தல 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்திய பிளேயிங் XI இப்படித்தான் இருக்கும்.. காரணம் ஆஸி தொடர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்தியா பி அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 77 ரன்கள் இரண்டாம் நாள் முடிவில் எடுத்திருக்கிறது. துவக்க ஆட்டக்காரர்கள் தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் 46 மற்றும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்

- Advertisement -