அது விராட் கோலி, சுப்மன் கில் கிடையாது… இந்த இந்திய வீரரை வச்சுதான் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவை காலி பண்ணுவாரு – ரிக்கி பாண்டிங் கருத்து!

0
19996

“இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இவர் சிறப்பாக செயல்பட வேண்டும்.” என்று இந்திய வீரரை குறிப்பிட்டு பேசியுள்ளார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

வருகிற ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது வானுயர எகிறியுள்ளது.

- Advertisement -

இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்திருக்கிறது. கடந்த முறை நடந்த பைனலில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இம்முறை அதை தவறவிடக்கூடாது என்கிற முனைப்பிலும் இருக்கிறது.

இந்திய அணிக்கு இங்கிலாந்தில் ரெக்கார்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆகையால் பலரும் ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்தும், இந்திய அணிக்கு திருப்புமுனையாக இருக்கும் வீரர் யார்? என்பது குறித்தும் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு திருப்புமுனையாக இருக்கப்போகும் வீரர் முகமது சமி. ரோகித் சர்மா அவரை சிறப்பாக கையாள வேண்டும் புதிய பந்து மற்றும் பழைய பந்து இரண்டிலும் மிகச் சிறப்பாக பந்து வீசுவார். எந்த நேரத்திலும் ஸ்விங் செய்வார். ஆஸ்திரேலியா வீரர்களே அவரை கவனமாக எதிர்கொள்வர். மதித்து விளையாடுவார்கள்.

- Advertisement -

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், இவரின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆஸ்திரேலியா அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கீ வீரர்களாக இருப்பர். அவர்களின் விக்கெட்டுகளை சமி விரைவாக எடுக்கும் பட்சத்தில், இந்திய அணி விரைவாக டிரைவர் சீட்டில் இருக்கும் ” என்று ரிக்கி பாண்டிங் பகிர்ந்து கொண்டார்.