கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“ஆட்டநாயகன் விருது பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன்” – முகமது சிராஜ் நெகிழ்ச்சியான செயல்!

நடப்பு பதினாறாவது ஆசியக் கோப்பையின் இறுதிநாள் இன்று. இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள், இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக் கொண்டுள்ளன.

- Advertisement -

இந்த போட்டி ஏற்கனவே இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட அதே ஆடுகளத்தில் நடத்தப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ஆரம்பத்தில் பேட்டிங் செய்யவும், பின்பு தொடர்ந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்று அனைவராலும் கணிக்கப்பட்டது.

எனவே இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஒட்டுமொத்த கணிப்புகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டார்கள்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இலங்கை அணியின் சரிவை முதலில் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்து இலங்கையின் சரிவை யாராலும் தடுக்க முடியவில்லை.

- Advertisement -

பும்ரா உடைய பந்துவீச்சு பார்ட்னர் முகமது சிராஜ் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் அதே இடத்தில் முடிவுரை எழுதிவிட்டார்.

மேற்கொண்டு மீண்டும் அந்த அவர் பவர் பிளேவுக்குள் ஒருவிக்கட்டும், பவர் பிளே முடிந்து ஒருவிக்கட்டும் கைப்பற்றினார். இவர்களுக்கு அடுத்து பந்து வீச வந்த மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இறுதியாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் முகமது சிராஜ் ஏழு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து ஒரு மெய்டன் செய்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவருடைய மிகச்சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் பேசும்பொழுது “இதை கனவு போல் உணர்கிறேன். கடந்த முறை இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இதையே செய்தேன். நான்கு விக்கெட் எடுத்த என்னால் ஐந்து விக்கெட் அங்கு பெற முடியவில்லை. விதியில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இன்று நான் அதற்காக அதிக முயற்சி செய்யவில்லை.

நீண்ட நாட்களாக சிறப்பாக பந்து வீசி வருகிறேன். முன்பு சில எட்ஜ் இருந்தது. ஆனால் இன்று அதைக் கண்டுபிடித்தேன். விக்கெட்டில் முன்பு சீமிங் இருந்தது. இன்று ஸ்விங் இருந்தது.

இதன் காரணமாக நான் புல் லென்த்தில் வீச நினைத்தேன். வேகப்பந்துவீச்சாளர்கள் இடையே நல்ல பிணைப்பு இருக்கும் பொழுது அது அணிக்கு உதவியாக மாறுகிறது. நான் பவுண்டரி கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். இது என்னுடைய சிறந்த ஸ்பெல். எனக்கு கிடைத்திருக்கும் ஆட்டநாயகன் விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த போட்டி நடந்திருக்காது!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts