“அவர ஆசிய கோப்பை இந்திய அணியில் எடுக்காதது எனக்கு ரொம்ப வருத்தம்” – ஏபி டிவில்லியர்ஸ் கவலை.!

0
6533

இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் உட்பட ஆறு அணிகள் பங்கு பெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப் போட்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை எதிர்த்து விளையாட உள்ளது .

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த ஆசிய கோப்பை போட்டிகள் நீண்ட காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நிலவி வரும் அரசியல் காரணங்களால் முதல்முறையாக ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இறுதிப் போட்டி உட்பட 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பையில் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் வைத்து நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயம் காரணமாக வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்த கேஎல் ராகுல் ஆகியோரின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு சிறிது தாமதமாக அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

17 பேர் கொண்ட இந்த பட்டியலில் இளம் வீரரான திலக் வர்மாவும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஆசியக் கோப்பை காண 50 ஓவர் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அணியில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான யுசேந்திர சஹால் நீக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் மற்ற போட்டிகளில் ரண்களை அதிகமாக வழங்கியதை தொடர்ந்து ஆசியக் கோப்பை காண தொடரிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து தென்னாப்பிரிக்கா அணியின் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் .

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் ” சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எனக்கு சிறிய ஏமாற்றம் இருந்தது அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் மேலும் அணைக்கு தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய ஒரு வீரர். மேலும் அவர் ஒரு ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர். அவர் ஆசிய கோப்பை காண இந்திய அணியில் இடம் பெறாதது என்னை ஏமாற்றம் அடைய செய்ததோடு வருத்தமாகவும் இருக்கிறது . இருந்தாலும் தற்போது அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது” என தெரிவித்திருக்கிறார்

மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா குறித்து பேசிய டிவிலியர்ஸ் ” நீண்ட நாட்களுக்குப் பிறகு அயர்லாந்து தொடரில் விளையாடிய பும்ராவின் பத்திரிக்கை பார்த்தேன் . மிகவும் துல்லியமாகவும் நல்ல வேகத்துடனும் பந்து வீசினார். இது பும்ரா எந்த அளவிற்கு ஒரு அபாயகரமான வீரர் என்பதை காட்டுகிறது என தெரிவித்திருக்கிறார். சஹால் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டது டிவில்லியர்ஸ்க்கு ஏர்சுக்கு சிறிய வருத்தத்தை கொடுத்திருக்கிறது.