ஐசிசி இதுக்கு மட்டும் எப்படி அனுமதி?.. பாகிஸ்தான் பிரபலம் ஹர்திக் பாண்டியா பற்றி சர்ச்சையான கேள்வி!

0
3455
Hardik

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் எல்லாத் துறைகளிலும் விளையாடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது!

இன்று போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிய உதவி ஏதும் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் உலக தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஆரம்ப நிலையில் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் கை கூடவில்லை.

ஆனாலும் கூட பும்ரா மிகவும் கட்டுப்பாடாக ரன் தராமல் பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆனால் சிராஜ் பக்கமாக இருந்து ரன்கள் கசிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அறிவுறுத்தல் படி மாற்றி வீசிய சிராஜ் முதல் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். ஆனாலும் பாகிஸ்தான் அணி பவர் பிளே முடிவதற்குள் 41 ரன்கள் எடுத்து நல்ல நிலையில்தான் இருந்தது.

- Advertisement -

மேற்கொண்டு மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் இந்த போட்டியில் கொஞ்சம் நன்றாகவே பேட்டிங் செய்து ரன் ரேட்டை உயர்த்த முயற்சி செய்தார்.

அவர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் பவுண்டரிகளை கொண்டு வந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு ஓவரில் பாயிண்ட் திசையில் கட் ஷாட் அடித்து ஒரு அற்புதமான பவுண்டரி அடித்தார்.

அப்படியான ஒரு பந்தை வீசியதற்காக ஹர்திக் பாண்டியா மிகவும் கோபப்பட்டு, தன்னைத்தானே திட்டிக் கொண்டு, அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பு பந்தை கையில் வைத்து பேசிவிட்டு, வெளியில் வீசினார். அதை இமாம் ஆட முயன்று எட்ஜ் எடுத்து கேஎல்.ராகுல் இடம் கேட்ச் ஆனது.

இந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா இடது கையில் ஒரு கையுறை அணிந்திருக்கிறார். இப்படியான கையுறைகள் அணிந்து பந்தை பிடிப்பது விதிகளின் படி தவறு. ஆனால் இது குறித்து எதிரணியிடம் பேசிவிட்டு, அவர்கள் சம்மதித்தால் அணிந்து கொள்ளலாம்.

இதில் சரியான முறையில் விதிகள் பின்பற்றப்பட்டதா? என்று தெரியவில்லை. இது குறித்து ட்விட்டரில் பாகிஸ்தான் பிரபலம் ஒருவர் “இதை எப்படி ஐசிசி அனுமதிக்கிறது? ” என்று கேட்டு புதிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது!