இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடியும்படி ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சு சாதகமாக அமைக்கப்படுவதாக கூறுவது அடிப்படை அற்றது என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விமர்சித்திருக்கிறார்.
இப்படியான விமர்சனங்களை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டில் முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பரப்பி வருகின்றன. இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியாவில் மோசமான ஆடுகளங்கள் அமைக்கப்படுவதாக எண்ணம் இருக்கிறது.
வேகப்பந்து வீட்டுக்கு சாதகம் இருந்தால் தவறில்லையா?
இதுகுறித்து பேசிய கம்பீர் கூறும் பொழுது “விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டரை நாட்களில் போட்டிகள் முடிகின்றன. ஆனால் அது குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஆனால் அதே அணிகள் இந்தியாவுக்கு வரும்பொழுது இரண்டரை நாட்களில் போட்டி முடிந்தால், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
“வேகப்பந்து வீட்டுக்கு சாதகம் இருந்தால் அது குறித்து யாரும் பேசுவது கிடையாது. நாம் இந்த விஷயத்தில் முன்னோக்கி நியாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகெங்கும் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டி நடக்கும் வகையில் ஆடுகளங்கள் துல்லியமாக அமைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை”
நீங்கள் திறமையாக இருக்க வேண்டும்
மேலும் பேசிய கம்பீர் “உங்களுக்கு ஒரு நல்ல டெஸ்ட் போட்டி தேவைப்பட்டால் நீங்கள் அதற்கான திறமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு டர்னிங் விக்கெட்டிலும் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமான விக்கெட்டிலும் விளையாடும் அளவுக்கு திறமையை பெற்று இருக்க வேண்டும்”
இதையும் படிங்க :
“எனவே இப்படி இருந்தால் இந்தியாவில் இரண்டரை நாட்களில் போட்டி முடிகின்றது, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது என்கின்ற விவாதங்கள் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன். எதிரணியினர் இதுகுறித்து பேசுவதை விட சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளையாட கற்றுக் கொள்வது நல்லது” என்று கூறியிருக்கிறார்.