பாபர் உன் மனசு சரியில்ல.. லோக்கல் மேட்ச்ல கூட பாவம்.. உடனே இதை செய்பா – ரஷித் லத்திப் அறிவுரை

0
48
Latif

தற்போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திரம் பேட்ஸ்மேன் பாபர் அசாம் பேட்டிங் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்ததிப் முக்கிய அறிவுரை ஒன்றை பாபர் அசாமுக்கு கூறியிருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே பாபர் அசாம் பேட்டிங் படிப்படியாக தேய்ந்து, உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட ரன் அடிக்க முடியாமல், உச்சகட்ட சரிவை சந்தித்திருக்கிறது. அவரது பேட்டிங் தனிப்பட்ட சரியில்லாதது பாகிஸ்தான் பணியின் வெற்றியை கடுமையாக பாதித்திருக்கிறது. இதன் காரணமாக அவரைச் சுற்றிலும் விமர்சனங்கள் பெருகி இருக்கிறது.

- Advertisement -

கேப்டன் பதவி சர்ச்சைகள்

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் எல்லா வடிவ கேப்டன் பொறுப்பையும் பாபர் அசாம் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை வருவதற்கு முன்பாக மீண்டும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக கொண்டு வந்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது சுற்று முன்னேற முடியாமல் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. இப்படி கேப்டன் பொறுப்பால் பாபர் அசாமுக்கு கடுமையானமன உளைச்சல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பாபர் அசாம் மனம் சரியாக செயல்படவில்லை

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவரது மனம் சரியான முறையில் செயல்படவில்லை என்றும், இதுவே தனிப்பட்ட முறையில் அவருடைய பேட்டிங் திறனை பாதிப்பதாகவும் ரஷித் லத்திப் கூறியிருக்கிறார்.

“இதுகுறித்து ரஷித் லத்திப் கூறும்பொழுது “பாபர் அசாம் மனநிலை சரியாக செயல்படவில்லை. அவர் வலுக்கட்டாயமாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது.மனம் சரியாக செயல்படாத பொழுது அது சமநிலையை பாதிக்கிறது. எனவே பந்திலும் கடினமாக அடித்து விளையாட முயற்சி செய்கிறோம்”

இதையும் படிங்க :

“கேப்டன் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டு அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தற்போது இருப்பது பேட்டிங் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. மனநிலை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் மன அழுத்தத்தை சமாளிக்க கணிசமாக போராடுகிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -