வீடியோ: ரசிகர்களால் நிறைந்த சேப்பாக்கம் ஸ்டேடியம்… 4 வருடத்திற்கு பிறகு தோனியின் என்ட்ரியை பார்க்க குவிந்த கூட்டம்!

0
269

2019ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் தோனியின் பயிற்சியைக்காண ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. பயிற்சிக்காக மைதானத்திற்குள் தோனி வந்தபோது ரசிகர்களின் கரகோஷம் எகிரியது. அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில், 31ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடைசியாக 2019ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் மூன்று ஐபிஎல்சீசன்கள் கொரோனா தொற்று காரணத்தால், குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடைபெற்றது. அதில் ஒரு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வருடம் மீண்டும் பழைய முறைப்படி உள்ளூர் மைதானத்தில் ஒரு போட்டியும் வெளி மைதானத்தில் ஒரு போட்டியும் என்கிற அடிப்படையில் நடக்கிறது.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை செய்து வருகின்றனர். சிஎஸ்கே வீரர்களின் பயிற்சியைக்காண விரும்பும் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதை பார்த்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் பட்டாலும் குவியத் துவங்கின. ஒரு மணி நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர்.

- Advertisement -

வீரர்களின் பயிற்சியை கண்டுகளித்த பிறகு, ஆவலோடு எதிர்பார்த்த மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். அப்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணைத் தொட்டது. கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பிறகு தோனியின் பயிற்சியை காண்பதால் முன்பைவிட அதிகமாக ரசிகர்கள் குவிந்திருக்கின்றனர்.

ரசிகர்களின் கரகோஷத்துடன் மகேந்திர சிங் தோனி பயிற்சிக்காக மைதானத்திற்குள் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீடியோ: