குறுக்கு வழியில் கேப்டன் ஆனாரா ஹர்திக்? சேத்தன் சர்மாவின் அதிர்ச்சி தகவல்

0
294

இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது சேத்தன் சர்மாவின்  ஒரு வீடியோ தான். செய்தியாளர்கள் மறைமுகமாக கேமரா வைத்து பேசிய போது சேத்தன் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் முக்கியமான கருத்து  ஹர்திக் பாண்டியா தமது வீட்டுக்கு வந்து பல மணி நேரம் பேசி விட்டு செல்வார் என்றும் என்னுடைய சோபாவின் படுத்து தூங்குவார் என்றும் பேசி உள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் ஹர்திக் பாண்டியா குறுக்கு வழியில் டி20 அணிக்கு கேப்டனாக ஆனாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு கேப்டனாக தகுதி இருக்கும் நபர்கள் என்றால் அது ஒன்று ஹர்திக் பாண்டியா , இன்னொன்ரு சஞ்சு சாம்சன் தான். சஞ்சு சாம்சன் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், கேரளா, அண்டர் 19 இந்திய அணி என பல்வேறு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருக்கிறது. எனினும் சஞ்சு சாம்சன் டி20 அணியின் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். இதனால்  ஹர்திக் பாண்டியா தான் இயல்பான சாய்ஸாக இருந்திருக்கும்.

நிலைமை இப்படி இருக்க சேத்தன் சர்மாவை அடிக்கடி சந்தித்து அவர் வீட்டில் பேசியிருக்கிறார் என்ற சம்பவம் தான் நெருடலை ஏற்படுத்துகிறது. தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் குறுக்கு வழியில் பயன்படுத்தினாரா என்று கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த வீடியோ ரோகித் சர்மாவும் தம்மை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசுவார் என்று சேத்தன் சர்மா கூறியிருந்தார். ஆனால் அது எந்த தருணம் என்று அவர் குறிப்பிடவில்லை.

கேப்டனாக இருக்கும் நபர் தேர்வு குழு உறுப்பினரை சந்தித்து அதை பற்றி பேசுவது தவறில்லை. இது கேப்டன் ஆவதற்கு முன்பு நடந்திருந்தால் ரோஹித் சர்மாவும் தவறான வழியை பயன்படுத்தினார் என்பதுதான் காரணமாக இருந்திருக்கும். இந்த விவகாரம் குறித்து இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

- Advertisement -